ETV Bharat / state

தவெக கொடி அறிமுக விழாவிற்கு காவல்துறை அனுமதி மறுப்பா? - tvk flag introduction function

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 6:46 AM IST

TVK Flag Introduction Event: தவெக கொடி அறிமுக விழாவில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தவெக தலைமை அலுவலகத்தில் வைத்து கொடி அறிமுக விழாவை நடத்திக் கொள்ளுமாறு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெக கொடியினை ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய்
தவெக கொடியினை ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடிகர் விஜய் நாளை (ஆக.22) தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்து கொடியேற்றி வைக்கிறார். பின்னர், பனையூர் தலைமை அலுவலகத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஆதித்யா ஸ்ரீராம் சிட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும், அதில் நிர்வாகிகளிடையே விஜய் பேச உள்ளார் எனவும், இதற்காக அனுமதி கோரி தவெக சார்பில் காவல்துறையினருக்கு கடிதம் ஒன்றை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், அதே மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை காரணமாக கொண்டு, விஜயின் தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தவெக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்திலே, அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்திக் கொள்ளுமாறும், அதில் சுமார் 300 பேர் வரை கலந்து கொள்ளும் அளவிற்கு இட வசதிகள் உள்ளதாகவும், அங்கு நிகழ்ச்சிகள் நடத்த எந்த ஒரு தடையும் இல்லை எனவும், காவல்துறை தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது வரை தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: நடிகர் விஜய் நாளை (ஆக.22) தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்து கொடியேற்றி வைக்கிறார். பின்னர், பனையூர் தலைமை அலுவலகத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஆதித்யா ஸ்ரீராம் சிட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும், அதில் நிர்வாகிகளிடையே விஜய் பேச உள்ளார் எனவும், இதற்காக அனுமதி கோரி தவெக சார்பில் காவல்துறையினருக்கு கடிதம் ஒன்றை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், அதே மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை காரணமாக கொண்டு, விஜயின் தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தவெக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்திலே, அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்திக் கொள்ளுமாறும், அதில் சுமார் 300 பேர் வரை கலந்து கொள்ளும் அளவிற்கு இட வசதிகள் உள்ளதாகவும், அங்கு நிகழ்ச்சிகள் நடத்த எந்த ஒரு தடையும் இல்லை எனவும், காவல்துறை தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது வரை தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : விஜய்க்கு அஷ்டம சனி.. அவசர அவசரமாக த.வெ.க. கொடியேற்றியது ஏன்? - ஜோதிடர் பரபரப்பு தகவல்! - Vijay TVK flag introduction

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.