ETV Bharat / state

காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அரசியல் களமாக மாற்றுவதா? - சமூக ஆர்வலர்கள் கொதிப்பு! - Madurai Gandhi Museum

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 1:46 PM IST

Gandhi Museum: மதுரையின் அடையாளமாக திகழும் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்ற பெயரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அரசியல் பேசுவது ஏற்புடையதல்ல என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காந்தி நினைவு அருங்காட்சியம்
காந்தி நினைவு அருங்காட்சியம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: ராணி மங்கம்மாள் நிர்வாகம் செய்வதற்காக 1670ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது. ராணி மங்கம்மாள் தனது ஆட்சியின்போது இந்த அரண்மனையின் பால்கனியில் இருந்து மதுரை முழுவதையும் பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது. அதுவே காந்தி அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தியாவின் மிகப்பழமையான காந்தி அருங்காட்சியமாக திகழும் இந்த அருங்காட்சியகத்தில், காந்தியின் படங்கள், காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை உள்ளன. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுகளை சுமந்து, மதுரையின் அடையாளமாக மட்டுமன்றி, தென்னிந்தியாவின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா தளமாகவும் திகழும் காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் வந்து செல்கின்றனர்.

பிற மாநிலங்களைச் சார்ந்தோர் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வருகை தந்து பார்வையிடுகின்ற இடமாகவும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் திகழ்கிறது. இந்த நிலையில் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அண்மைக்காலமாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அரசியல் தொடர்பாக பேசி வருகின்ற காரணத்தால், காந்தி நினைவு அருங்காட்சியகம் என்ற பொது அடையாளத்திற்கு வேறொரு பார்வை விழுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் கூறுகையில், “தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்காக நடத்திய போராட்டத்தின் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது இந்த அருங்காட்சியகம்.

பொதுவான இந்த இடத்தில் அரசியல் கட்சிகள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்துவது வருந்தத்தக்கது. பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் அரசியல் பேச மதுரை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” என்கிறார் அவர்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தியபோது எடுத்த புகைப்படம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஈடிவி பாரத் மதுரை செய்தியாளர் சிவக்குமார் காந்தி நினைவு அருங்காட்சியக வட்டாரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அரசியல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி தர மறுத்தும் கூட, சிலர் அத்துமீறி உள்ளுக்குள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அதில் பங்கேற்க வருகின்ற அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, தங்களது கருத்துக்களை அரசியல் சார்ந்து வெளிப்படுத்துகின்ற காரணத்தால் காந்தி அருங்காட்சியக நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனை பலமுறை சுட்டிக்காட்டியும் கூட புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இனி வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டவட்டமாக அனுமதி மறுக்கப்படும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 160 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட உலகின் 2வது பெரிய நீதிமன்றம்.. சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாறு அறிவோம் - madras high court history

மதுரை: ராணி மங்கம்மாள் நிர்வாகம் செய்வதற்காக 1670ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது. ராணி மங்கம்மாள் தனது ஆட்சியின்போது இந்த அரண்மனையின் பால்கனியில் இருந்து மதுரை முழுவதையும் பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது. அதுவே காந்தி அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தியாவின் மிகப்பழமையான காந்தி அருங்காட்சியமாக திகழும் இந்த அருங்காட்சியகத்தில், காந்தியின் படங்கள், காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை உள்ளன. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுகளை சுமந்து, மதுரையின் அடையாளமாக மட்டுமன்றி, தென்னிந்தியாவின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா தளமாகவும் திகழும் காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் வந்து செல்கின்றனர்.

பிற மாநிலங்களைச் சார்ந்தோர் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வருகை தந்து பார்வையிடுகின்ற இடமாகவும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் திகழ்கிறது. இந்த நிலையில் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அண்மைக்காலமாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அரசியல் தொடர்பாக பேசி வருகின்ற காரணத்தால், காந்தி நினைவு அருங்காட்சியகம் என்ற பொது அடையாளத்திற்கு வேறொரு பார்வை விழுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் கூறுகையில், “தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்காக நடத்திய போராட்டத்தின் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது இந்த அருங்காட்சியகம்.

பொதுவான இந்த இடத்தில் அரசியல் கட்சிகள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்துவது வருந்தத்தக்கது. பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் அரசியல் பேச மதுரை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” என்கிறார் அவர்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தியபோது எடுத்த புகைப்படம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஈடிவி பாரத் மதுரை செய்தியாளர் சிவக்குமார் காந்தி நினைவு அருங்காட்சியக வட்டாரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அரசியல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி தர மறுத்தும் கூட, சிலர் அத்துமீறி உள்ளுக்குள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அதில் பங்கேற்க வருகின்ற அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, தங்களது கருத்துக்களை அரசியல் சார்ந்து வெளிப்படுத்துகின்ற காரணத்தால் காந்தி அருங்காட்சியக நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனை பலமுறை சுட்டிக்காட்டியும் கூட புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இனி வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டவட்டமாக அனுமதி மறுக்கப்படும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 160 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட உலகின் 2வது பெரிய நீதிமன்றம்.. சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாறு அறிவோம் - madras high court history

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.