ETV Bharat / state

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி - ஆலை உரிமையாளருக்கு வலைவீச்சு! - Sattur firecracker explosion

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 11:39 AM IST

Sattur firecracker explosion Accident: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பந்துவார்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல்துறையினர் தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன்(41) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று (ஜூன் 29) காலை பட்டாசு தயாரிக்க தேவையான பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் புதுசூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி(38), அச்சங்குளம் ராஜ்குமார்(45), சத்திரபட்டி மோகன்(40), செல்வக்குமார்(50) ஆகிய 4 பேரும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மருந்து கலக்கு போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக, வெடி விபத்து ஏற்பட்டதில் 3 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் நான்கு தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். வெடி விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பெண் அதிகாரி.. நெல்லையில் குழந்தை திருமணத்தை தடுப்பதில் முன்னெடுப்பு!

மேலும், சாத்தூர் தாலுகா காவல் துறையினர், சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததார்கள் உள்ளிட்டோரை சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

மேலும் உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏற்கனவே கடந்த மே 9ஆம் தேதி சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் தற்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விருதுநகர்:சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் பலி! - Sattur firecracker explosion

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன்(41) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று (ஜூன் 29) காலை பட்டாசு தயாரிக்க தேவையான பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் புதுசூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி(38), அச்சங்குளம் ராஜ்குமார்(45), சத்திரபட்டி மோகன்(40), செல்வக்குமார்(50) ஆகிய 4 பேரும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மருந்து கலக்கு போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக, வெடி விபத்து ஏற்பட்டதில் 3 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் நான்கு தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். வெடி விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பெண் அதிகாரி.. நெல்லையில் குழந்தை திருமணத்தை தடுப்பதில் முன்னெடுப்பு!

மேலும், சாத்தூர் தாலுகா காவல் துறையினர், சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததார்கள் உள்ளிட்டோரை சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

மேலும் உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏற்கனவே கடந்த மே 9ஆம் தேதி சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் தற்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விருதுநகர்:சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் பலி! - Sattur firecracker explosion

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.