ETV Bharat / state

நெல்லையில் சிறுவனை தாக்கிய குரங்கு.. அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க சிறப்பு படை அமைப்பு! - Monkey attack in tirunelveli

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 5:00 PM IST

Updated : May 20, 2024, 6:20 PM IST

Monkey attack in tirunelveli: திருநெல்வேலுஇ மாவட்டம் பாபநாசம் அருகே குரங்கு கடித்ததில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

சிகிச்சையில் உள்ள சிறுவன் புகைப்படம்
சிகிச்சையில் உள்ள சிறுவன் புகைப்படம் (Photo credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியான பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். முன்னதாக, சென்ற வாரம் தங்கம் என்ற மூதாட்டி உள்பட மூன்று பேரை குரங்கு கடித்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை மொத்தம் 5 பேர் குரங்கு கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கடந்த 17ஆம் தேதி வனத்துறையினர் அட்டகாசம் செய்துவந்த இரண்டு குரங்குகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த காட்டு பகுதிகளுக்கு விட்டனர்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) சிவந்திபுரம் பகுதி வேதக்கோயில் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துராமன்(13). எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவனை வெள்ளை மந்தி குரங்கு ஒன்று தாக்கியுள்ளது.

இதில், சிறுவனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ச்சியாக குரங்குகள் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், சிவந்திபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் இளையராஜா தெரிவித்துள்ளார். அதன்படி, வனவர் செல்வசிவா என்பவர் தலைமையில், வனக்காப்பாளர்கள் அஜித்குமார், உலகநாதன் மற்றும் வனக்காவலர் ஆரோக்கிய இருதயராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குரங்குகளில் நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, பொதுமக்களைக் கடிக்கும் குரங்குகளை அடையாளம் கண்டு அவற்றைப் பிடித்து, வனப்பகுதியில் விடும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, குரங்குளை பிடிக்கும் பணி முடியும் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்டவர்களை அப்பகுதியில் முகாமிட்டு இருக்கும் படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் இளையராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில் குரங்குகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது சற்று நிம்மதி அளிப்பதாக அப்பகுதி மக்களுக்கு கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியான பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். முன்னதாக, சென்ற வாரம் தங்கம் என்ற மூதாட்டி உள்பட மூன்று பேரை குரங்கு கடித்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை மொத்தம் 5 பேர் குரங்கு கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கடந்த 17ஆம் தேதி வனத்துறையினர் அட்டகாசம் செய்துவந்த இரண்டு குரங்குகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த காட்டு பகுதிகளுக்கு விட்டனர்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) சிவந்திபுரம் பகுதி வேதக்கோயில் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துராமன்(13). எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவனை வெள்ளை மந்தி குரங்கு ஒன்று தாக்கியுள்ளது.

இதில், சிறுவனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ச்சியாக குரங்குகள் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், சிவந்திபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் இளையராஜா தெரிவித்துள்ளார். அதன்படி, வனவர் செல்வசிவா என்பவர் தலைமையில், வனக்காப்பாளர்கள் அஜித்குமார், உலகநாதன் மற்றும் வனக்காவலர் ஆரோக்கிய இருதயராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குரங்குகளில் நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, பொதுமக்களைக் கடிக்கும் குரங்குகளை அடையாளம் கண்டு அவற்றைப் பிடித்து, வனப்பகுதியில் விடும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, குரங்குளை பிடிக்கும் பணி முடியும் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்டவர்களை அப்பகுதியில் முகாமிட்டு இருக்கும் படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் இளையராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில் குரங்குகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது சற்று நிம்மதி அளிப்பதாக அப்பகுதி மக்களுக்கு கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

Last Updated : May 20, 2024, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.