ETV Bharat / state

தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க சேலம் விவசாயிகள் கோரிக்கை! - Salem Farmer demands Kallu sales

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 4:59 PM IST

Salem farmers petition to collector: தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க தமிழகத்தில் கள்ளு இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு நீக்க வேண்டும் என சேலம் விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்: தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு நீக்க வேண்டும் என்று சேலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் மீண்டும் தொடராமல் இருக்க, அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சேலத்தில் விவசாயிகள் கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவியுடன் கோரிக்கை வைத்தனர். மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், லட்சக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கள்ளு இறக்க விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தங்கராஜ் அளித்த பேட்டியில், "30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் கள்ளு இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாக தெரிவித்தார்.

இத்தடையை நீக்கினால் கள்ளச்சாராய உயிரிழப்பையும் தடுக்க முடியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என கூறினார். கள்ளு என்பது போதைப்பொருள் இல்லை எனவும், அது உணவுப் பொருள் என்று கூறிய அவர், உடலுக்கு நன்மை தரக்கூடிய கள்ளை தடை செய்திருப்பது வேதனையை ஏற்படுத்துகிறதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், மின்சார ஒழுங்குமுறை நடவடிக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசுக்கு விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனு அளித்த 30 நிமிடத்தில் கோரிக்கை நிறைவேற்றம்; பெரம்பலூர் கலெக்டருக்கு குவியும் பாராட்டு!

சேலம்: தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு நீக்க வேண்டும் என்று சேலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் மீண்டும் தொடராமல் இருக்க, அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சேலத்தில் விவசாயிகள் கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவியுடன் கோரிக்கை வைத்தனர். மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், லட்சக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கள்ளு இறக்க விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தங்கராஜ் அளித்த பேட்டியில், "30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் கள்ளு இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாக தெரிவித்தார்.

இத்தடையை நீக்கினால் கள்ளச்சாராய உயிரிழப்பையும் தடுக்க முடியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என கூறினார். கள்ளு என்பது போதைப்பொருள் இல்லை எனவும், அது உணவுப் பொருள் என்று கூறிய அவர், உடலுக்கு நன்மை தரக்கூடிய கள்ளை தடை செய்திருப்பது வேதனையை ஏற்படுத்துகிறதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், மின்சார ஒழுங்குமுறை நடவடிக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசுக்கு விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனு அளித்த 30 நிமிடத்தில் கோரிக்கை நிறைவேற்றம்; பெரம்பலூர் கலெக்டருக்கு குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.