ETV Bharat / state

தவறுதலாக பகிர்ந்தால், ஏன் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீங்க..? - எஸ்.வி சேகர் வழக்கில் கோர்ட் கேள்வி! - S VE SHEKHER CASE

பெண் பத்திரக்கையாளர்கள் குறித்து தவறுதலாக கருத்து பகிர்ந்தால், ஏன் பத்திரிக்கையாளர்களிடம் மீண்டும் எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டார்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எஸ்.வி சேகர், உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
எஸ்.வி சேகர், உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2024, 1:30 PM IST

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி. சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சொத்துக்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் - நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர்!

மேலும், மேல்முறையீடு செய்ய உள்ளதாக சேகர் தரப்பில் கூறியதை அடுத்து, 1 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எஸ் வி. சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கில் மறு உத்தரவு வரும்வரை தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்.வி சேகர் வழக்கு தொடர உரிமை உள்ளது. தவறுதலாக எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து கருத்து நீக்கியதுடன் உடனடியாக மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும், சாட்சிகள் விசாரணை சட்டம் 65Bன் படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எந்த பதிவுகள் வந்தாலும், அதை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? படிக்காமல் பகிர்ந்ததாக தெரிவித்தால்? என்ன காரணத்திற்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார்.

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி. சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சொத்துக்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் - நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர்!

மேலும், மேல்முறையீடு செய்ய உள்ளதாக சேகர் தரப்பில் கூறியதை அடுத்து, 1 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எஸ் வி. சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கில் மறு உத்தரவு வரும்வரை தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்.வி சேகர் வழக்கு தொடர உரிமை உள்ளது. தவறுதலாக எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து கருத்து நீக்கியதுடன் உடனடியாக மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும், சாட்சிகள் விசாரணை சட்டம் 65Bன் படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எந்த பதிவுகள் வந்தாலும், அதை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? படிக்காமல் பகிர்ந்ததாக தெரிவித்தால்? என்ன காரணத்திற்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.