ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டர்.. சென்னைையில் அதிகாலை நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்! - CHENNAI ENCOUNTER

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 8:56 AM IST

Rowdy Encounter in Chennai: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

சென்னையில் போலீஸ் என்கவுண்டர்
சென்னையில் போலீஸ் என்கவுண்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை (Armstrong Murder Case) செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் பல்வேறு நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 11 நபர்களையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில், கொலை செய்துவிட்டு ஆயுதங்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மாதவரம் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றவாளிகள் தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்று அதனைப் பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் திருவேங்கடம் என்ற நபரை இன்று (ஜூலை 14) அதிகாலை போலீசார் மாதவரம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது முள்புதர்கள் நிறைந்த அந்த பகுதியில் அழைத்துச் சென்றபோது திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து போலீசாரைத் தாக்க முயற்சித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.ரவுடி திருவேங்கடத்தை நோக்கி இரண்டு ரவுண்ட்கள் போலீசார் சுட்டுள்ளனர்.

இதில், திருவேங்கடத்தின் வலது கை தோள்பட்டையிலும், நெஞ்சு பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக தெரிகிறது. அத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த திருவேங்கடம் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன்பு ஒருமாத காலம் அவரை நோட்டமிட்டு அவர்கள் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கூட்டாளிகளுக்கு திருவேங்கடம் தகவல் தெரிவித்து வந்ததும், விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் இவர் மீது ஏற்கெனவே இரண்டு கொலை வழக்குகள் உட்பட ஐந்து வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவரகளை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் ஒரு ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'நரம்பு பகுதிக்கு குறி'.. கொலைக்கு 45 நிமிடங்கள் முன்பு ஸ்கெட்ச்.. ஆம்ஸ்ட்ராங் வீழ்த்தப்பட்டது எப்படி? - bsp armstrong murder plan

சென்னை: சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை (Armstrong Murder Case) செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் பல்வேறு நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 11 நபர்களையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில், கொலை செய்துவிட்டு ஆயுதங்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மாதவரம் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றவாளிகள் தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்று அதனைப் பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் திருவேங்கடம் என்ற நபரை இன்று (ஜூலை 14) அதிகாலை போலீசார் மாதவரம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது முள்புதர்கள் நிறைந்த அந்த பகுதியில் அழைத்துச் சென்றபோது திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து போலீசாரைத் தாக்க முயற்சித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.ரவுடி திருவேங்கடத்தை நோக்கி இரண்டு ரவுண்ட்கள் போலீசார் சுட்டுள்ளனர்.

இதில், திருவேங்கடத்தின் வலது கை தோள்பட்டையிலும், நெஞ்சு பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக தெரிகிறது. அத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த திருவேங்கடம் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன்பு ஒருமாத காலம் அவரை நோட்டமிட்டு அவர்கள் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கூட்டாளிகளுக்கு திருவேங்கடம் தகவல் தெரிவித்து வந்ததும், விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் இவர் மீது ஏற்கெனவே இரண்டு கொலை வழக்குகள் உட்பட ஐந்து வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவரகளை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் ஒரு ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'நரம்பு பகுதிக்கு குறி'.. கொலைக்கு 45 நிமிடங்கள் முன்பு ஸ்கெட்ச்.. ஆம்ஸ்ட்ராங் வீழ்த்தப்பட்டது எப்படி? - bsp armstrong murder plan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.