ETV Bharat / state

இந்தியா கூட்டணியின் முழு அடைப்பு போராட்டம்.. புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - Puducherry Bandh

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 10:37 AM IST

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினரால் நடத்தப்பட்டு வரும் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதன்படி, இன்று புதுச்சேரியில் காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, வழுதாவூர் சாலை, விழுப்புரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு கடைகள் உட்பட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

இதே போன்று பெரிய மீன் மார்க்கெட், சின்ன மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு மீன் அங்காடி சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக ஆட்டோ, டெம்போக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் முழுவதும் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகள் ஒரு சில மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் அரசுப் பேருந்துகள் மாநில எல்லையான கன்னி கோவில், மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம் மற்றும் கோரிமேடு ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டுச் செல்கிறது.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி வன்கொடுமை வழக்கு: குற்றவாளி விவேகானந்தன் சிறையில் தற்கொலை

அதேபோல், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை புதுச்சேரி அரசு விடுமுறையும் அளித்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. மேலும், சினிமா திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், காலையில் கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்துகள் இல்லாமல் கடுமையான அவதிக்கு உள்ளாகினர். இதனிடையே, இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதன்படி, இன்று புதுச்சேரியில் காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, வழுதாவூர் சாலை, விழுப்புரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு கடைகள் உட்பட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

இதே போன்று பெரிய மீன் மார்க்கெட், சின்ன மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு மீன் அங்காடி சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக ஆட்டோ, டெம்போக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் முழுவதும் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகள் ஒரு சில மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் அரசுப் பேருந்துகள் மாநில எல்லையான கன்னி கோவில், மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம் மற்றும் கோரிமேடு ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டுச் செல்கிறது.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி வன்கொடுமை வழக்கு: குற்றவாளி விவேகானந்தன் சிறையில் தற்கொலை

அதேபோல், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை புதுச்சேரி அரசு விடுமுறையும் அளித்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. மேலும், சினிமா திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், காலையில் கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்துகள் இல்லாமல் கடுமையான அவதிக்கு உள்ளாகினர். இதனிடையே, இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.