ETV Bharat / state

பார்சல் சேவையில் சேலம் ரயில்வே கோட்டம் முன்னிலை.. எவ்வளவு வருவாய் தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 3:10 PM IST

Salem Railway Income: சேலம் ரயில்வே கோட்டம், கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 959 குவிண்டால் பார்சலைக் கையாண்டு, 14.08 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

பார்சல் ரயில் சேவையில் சேலம் ரயில்வே கோட்டம் முன்னிலை
பார்சல் ரயில் சேவையில் சேலம் ரயில்வே கோட்டம் முன்னிலை

சேலம்: தெற்கு ரயில்வேயில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் ரயில் சேவைகளை இயக்குவதில், சேலம் ரயில்வே கோட்டம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், 145 பார்சல் ரயில் சேவைகளை இயக்கி, 3.19 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அதே போன்று, சாலை மார்க்கமாக சரக்குப் பொருள்களை எடுத்துச் செல்வதை ஒப்பிடும்போது, ரயில்களில் வேகமாக எடுத்துச் செல்ல முடிகிறது.

குறிப்பாக முட்டை, பால் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை அசாம் மற்றும் நாட்டின் வடக்கு பகுதிகளுக்கு மூன்று நாட்களில் கொண்டு சேர்க்கப்படுகிறது. சேலம் ரயில்வே கோட்டம், கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டங்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 959 குவிண்டால் பார்சலைக் கையாண்டு, 14.08 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 365 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கும் பிரத்யேக பார்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், மேட்டுப்பாளையம், போத்தனூர், கோயம்புத்தூர் வடக்கு, வாஞ்சிபாளையம் மற்றும் ஊத்துக்குளி ஆகிய ரயில் நிலையங்களில் பார்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்கள், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள முதன்மை வணிக ஆய்வாளர் முத்துக்குமாரை 9600956232 என்ற எண்ணிலும், பார்சல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 9543152339 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் எம்.பூபதிராஜா கூறுகையில், “பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வகையில், நீண்ட கால அடிப்படையில் பார்சல் வேன்களை இயக்குதல், பயணிகள் ரயிலில் பார்சல் பிரிவுகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் ரயில்வே கோட்டம் சுமார் 363.9 டன் சரக்குகளை கையாளும் வகையில், கோயம்புத்தூர் முதல் படேல் நகர் (டெல்லி) வரையிலான பார்சல் ரயில் இயக்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

இந்த வாராந்திர ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், விஜயவாடா (கிருஷ்ணா கால்வாய்) மற்றும் நாக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பார்சல் ரயில் சேவைக்கு 20.75 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவு: மாசு கட்டுபாட்டு வாரியத்தின் திட்டம் என்ன - உயர்நீதிமன்றம் கேள்வி!

சேலம்: தெற்கு ரயில்வேயில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் ரயில் சேவைகளை இயக்குவதில், சேலம் ரயில்வே கோட்டம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், 145 பார்சல் ரயில் சேவைகளை இயக்கி, 3.19 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அதே போன்று, சாலை மார்க்கமாக சரக்குப் பொருள்களை எடுத்துச் செல்வதை ஒப்பிடும்போது, ரயில்களில் வேகமாக எடுத்துச் செல்ல முடிகிறது.

குறிப்பாக முட்டை, பால் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை அசாம் மற்றும் நாட்டின் வடக்கு பகுதிகளுக்கு மூன்று நாட்களில் கொண்டு சேர்க்கப்படுகிறது. சேலம் ரயில்வே கோட்டம், கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டங்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 959 குவிண்டால் பார்சலைக் கையாண்டு, 14.08 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 365 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கும் பிரத்யேக பார்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், மேட்டுப்பாளையம், போத்தனூர், கோயம்புத்தூர் வடக்கு, வாஞ்சிபாளையம் மற்றும் ஊத்துக்குளி ஆகிய ரயில் நிலையங்களில் பார்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்கள், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள முதன்மை வணிக ஆய்வாளர் முத்துக்குமாரை 9600956232 என்ற எண்ணிலும், பார்சல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 9543152339 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் எம்.பூபதிராஜா கூறுகையில், “பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வகையில், நீண்ட கால அடிப்படையில் பார்சல் வேன்களை இயக்குதல், பயணிகள் ரயிலில் பார்சல் பிரிவுகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் ரயில்வே கோட்டம் சுமார் 363.9 டன் சரக்குகளை கையாளும் வகையில், கோயம்புத்தூர் முதல் படேல் நகர் (டெல்லி) வரையிலான பார்சல் ரயில் இயக்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

இந்த வாராந்திர ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், விஜயவாடா (கிருஷ்ணா கால்வாய்) மற்றும் நாக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பார்சல் ரயில் சேவைக்கு 20.75 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவு: மாசு கட்டுபாட்டு வாரியத்தின் திட்டம் என்ன - உயர்நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.