ETV Bharat / state

போனில் பேச்சு.. விருந்துக்கு அழைப்பு.. ரூ.50 லட்சம் பறிமுதல் விவகாரத்தில் பெணணிடம் விசாரணை! - Cell phone shop owner kidnapped

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 5:31 PM IST

Chennai Cellphone shop owner kidnapped: செல்போன் கடை உரிமையாளரைக் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: செல்போன் கடை உரிமையாளரைக் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த சம்பவம் தொடர்பாக பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது வேலூரைச் சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (32). இவர் பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்நிலையில், பெண் ஒருவர் இவருடன் செல்போன் மூலமாக பழகி வந்துள்ளார். அவர் கடந்த மே 17ஆம் தேதி தனது வீட்டில் விருந்து நடப்பதாக பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ இரண்டாவது தெரு பகுதிக்கு ஜாவித் சைபுதீனை அழைத்துள்ளார்.

இதனை நம்பிச் சென்ற ஜாவித் சைபுதீனை, அங்கு தயாராக இருந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது. இதனையடுத்து, ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் விடுவிப்போம் என அந்த கும்பல் மிரட்டியதாக தெரிகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், ஜாவீத் சைபுதீன் தனது குடும்பத்தினரிடம் பேசி, அந்த கும்பலிடம் ரூ.50 லட்சம் பணம் கொடுத்து கடந்த மே 18ஆம் தேதி தப்பித்து வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, இது குறித்து ஜாவித் சைபுதீன் போலீசாரிடம் அளித்துள்ள புகாரில், தன்னுடன் செல்போனில் பழகி வந்த பெண் ஒருவர் அழைத்ததன் பேரில் இரவு விருந்துக்குச் சென்றதாகவும், அங்கு இருந்த கும்பல் கடத்திச் சென்று 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டுள்ளது. மேலும், கடத்தல் கும்பல் உன்னை கொலை செய்தால் தங்களுக்கு வேறு ஒரு நபர் ரூ.30 லட்சம் பணம் தருவதாக கூறியுள்ளார் என மிரட்டியதாகவும் ஜாவித் சைபுதீன் தெரிவித்துள்ளார்.

புகாரின் பெயரில், சென்னை பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். தொடர்ந்து, பட்டினப்பாக்கத்துக்கு ஜாவித் சைபுதீனை வர வைத்த பெண் யார் என்று காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், செல்போன் கடை உரிமையாளர் ஜாவித் சைபுதினை விருந்துக்கு அழைத்து காரில் கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் பறித்த சம்பவத்தில், வேலூரைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: உச்சம் தொட்ட தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் இன்றையை விலை நிலவரம் என்ன? - Tomato Price Today In Chennai

சென்னை: செல்போன் கடை உரிமையாளரைக் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த சம்பவம் தொடர்பாக பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது வேலூரைச் சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (32). இவர் பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்நிலையில், பெண் ஒருவர் இவருடன் செல்போன் மூலமாக பழகி வந்துள்ளார். அவர் கடந்த மே 17ஆம் தேதி தனது வீட்டில் விருந்து நடப்பதாக பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ இரண்டாவது தெரு பகுதிக்கு ஜாவித் சைபுதீனை அழைத்துள்ளார்.

இதனை நம்பிச் சென்ற ஜாவித் சைபுதீனை, அங்கு தயாராக இருந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது. இதனையடுத்து, ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் விடுவிப்போம் என அந்த கும்பல் மிரட்டியதாக தெரிகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், ஜாவீத் சைபுதீன் தனது குடும்பத்தினரிடம் பேசி, அந்த கும்பலிடம் ரூ.50 லட்சம் பணம் கொடுத்து கடந்த மே 18ஆம் தேதி தப்பித்து வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, இது குறித்து ஜாவித் சைபுதீன் போலீசாரிடம் அளித்துள்ள புகாரில், தன்னுடன் செல்போனில் பழகி வந்த பெண் ஒருவர் அழைத்ததன் பேரில் இரவு விருந்துக்குச் சென்றதாகவும், அங்கு இருந்த கும்பல் கடத்திச் சென்று 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டுள்ளது. மேலும், கடத்தல் கும்பல் உன்னை கொலை செய்தால் தங்களுக்கு வேறு ஒரு நபர் ரூ.30 லட்சம் பணம் தருவதாக கூறியுள்ளார் என மிரட்டியதாகவும் ஜாவித் சைபுதீன் தெரிவித்துள்ளார்.

புகாரின் பெயரில், சென்னை பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். தொடர்ந்து, பட்டினப்பாக்கத்துக்கு ஜாவித் சைபுதீனை வர வைத்த பெண் யார் என்று காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், செல்போன் கடை உரிமையாளர் ஜாவித் சைபுதினை விருந்துக்கு அழைத்து காரில் கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் பறித்த சம்பவத்தில், வேலூரைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: உச்சம் தொட்ட தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் இன்றையை விலை நிலவரம் என்ன? - Tomato Price Today In Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.