ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் பரிமாற்றம்? - பெண் வழக்கறிஞரிடம் விசாரணை! - armstrong murder case

Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளவரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இது தொடர்பாக பெண் வழக்கறிஞரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 7:38 PM IST

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரில் ஒருவரான திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதையடுத்து, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 10 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராக கருதப்படும் மூன்று பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். மேலும், இந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார்? கூலிப்படையினருக்கு எவ்வளவு பணம் கைமாறியது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரின் வங்கிக் கணக்கிற்கு சமீபத்தில் ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து தான் இந்த பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவரான மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினரான அருள் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

அருளின் செல்போன் அழைப்புகளை வைத்து தற்போது பெண் வழக்கறிஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அல்லது அவருக்கு நேரடி தொடர்பு இருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

தற்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள பெண் வழக்கறிஞரின் கணவர் சென்னை ஜாம்பஜாரில் பிரபல ரவுடி என்பது தெரியவந்துள்ளது. மேலும், வழக்கறிஞர் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது மகன் பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், தற்போது சிறையில் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும், பெண் வழக்கறிஞர் மேல் சில வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண் வழக்கறிஞர் மூலமாக ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு ஏதாவது தகவல் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களது வங்கிக் கணக்கையும் போலீசார் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குண்டர் சட்ட மேல்முறையீட்டுக்கான அறிவுரை கழகத்தை மதுரையில் அமைக்க கோரிய வழக்கு; அரசு பதிலளிக்க உத்தரவு! - Advisory council for Goondas

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரில் ஒருவரான திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதையடுத்து, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 10 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராக கருதப்படும் மூன்று பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். மேலும், இந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார்? கூலிப்படையினருக்கு எவ்வளவு பணம் கைமாறியது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரின் வங்கிக் கணக்கிற்கு சமீபத்தில் ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து தான் இந்த பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவரான மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினரான அருள் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

அருளின் செல்போன் அழைப்புகளை வைத்து தற்போது பெண் வழக்கறிஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அல்லது அவருக்கு நேரடி தொடர்பு இருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

தற்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள பெண் வழக்கறிஞரின் கணவர் சென்னை ஜாம்பஜாரில் பிரபல ரவுடி என்பது தெரியவந்துள்ளது. மேலும், வழக்கறிஞர் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது மகன் பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், தற்போது சிறையில் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும், பெண் வழக்கறிஞர் மேல் சில வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண் வழக்கறிஞர் மூலமாக ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு ஏதாவது தகவல் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களது வங்கிக் கணக்கையும் போலீசார் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குண்டர் சட்ட மேல்முறையீட்டுக்கான அறிவுரை கழகத்தை மதுரையில் அமைக்க கோரிய வழக்கு; அரசு பதிலளிக்க உத்தரவு! - Advisory council for Goondas

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.