ETV Bharat / state

ஆடி அமாவாசை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்த மக்கள்..முன்னோர்களுக்கு தர்ப்பணம்! - aadi amavasai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 4:28 PM IST

Aadi amavasai: ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: ஆடி அமாவாசை இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதன்படி 108 திவ்ய தேசங்களில் 40 வது திவ்ய தேசமான பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாளுக்கு கடற்கரையில் சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

பூம்புகாரில் ஆடி அமாவாசை (Video Credit - ETV Bharat Tamilnadu)

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்குமிடம் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும். ஆடி அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் முழுவதும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பொதுமக்கள் காவிரி சங்கமத்தில் குவிந்துள்ளனர்.

முன்னோர்களுக்கு தலைவாழை இலை போட்டு எல், பச்சரிசி, வெற்றிலை பாக்கு, பூ, வாழைப்பழம், கீரை வகைகள், காய்கறிகள் வைத்து சுடம் பத்தி ஏற்றி தீபாராதனை காண்பித்து செய்யவேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்து, தர்ப்பணம் கொடுத்து காவிரி சங்கமத்தில் புனித நீராடினர்.

இதனிடையே, சீர்காழி அடுத்த திருநாங்கூர் அருகே அமைந்துள்ள பார்த்தன்பள்ளியில், வைணவ திவ்ய தேசங்களில் 40 வது தேசமாக விளங்கும் பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி ஆலயம் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, பார்த்தான்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் பூம்புகார் கடற்கரைக்கு எழுந்தருளினார். அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பலாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.. புதுக்கோட்டை அருகே வினோத வழிபாடு! - Veeralaksmi Amman Temple

மயிலாடுதுறை: ஆடி அமாவாசை இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதன்படி 108 திவ்ய தேசங்களில் 40 வது திவ்ய தேசமான பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாளுக்கு கடற்கரையில் சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

பூம்புகாரில் ஆடி அமாவாசை (Video Credit - ETV Bharat Tamilnadu)

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்குமிடம் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும். ஆடி அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் முழுவதும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பொதுமக்கள் காவிரி சங்கமத்தில் குவிந்துள்ளனர்.

முன்னோர்களுக்கு தலைவாழை இலை போட்டு எல், பச்சரிசி, வெற்றிலை பாக்கு, பூ, வாழைப்பழம், கீரை வகைகள், காய்கறிகள் வைத்து சுடம் பத்தி ஏற்றி தீபாராதனை காண்பித்து செய்யவேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்து, தர்ப்பணம் கொடுத்து காவிரி சங்கமத்தில் புனித நீராடினர்.

இதனிடையே, சீர்காழி அடுத்த திருநாங்கூர் அருகே அமைந்துள்ள பார்த்தன்பள்ளியில், வைணவ திவ்ய தேசங்களில் 40 வது தேசமாக விளங்கும் பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி ஆலயம் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, பார்த்தான்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் பூம்புகார் கடற்கரைக்கு எழுந்தருளினார். அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பலாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.. புதுக்கோட்டை அருகே வினோத வழிபாடு! - Veeralaksmi Amman Temple

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.