ETV Bharat / state

தருமபுரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.. முதல் முறை வாக்காளர்கள் முதல் வேட்பாளர்கள் வரை ஆர்வத்துடன் வாக்களிப்பு..! - Lok Sabha election 2024

Dharmapuri Lok sabha constituency: தருமபுரி மக்களவைத் தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அத்தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகன் தனது குடும்பத்துடன் வந்து அன்னசாகரம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தியுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 9:08 AM IST

Etv Bharat
Etv Bharat

தருமபுரி: நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்கள் ஜனநாயக கடைமைய செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தருமபுரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ர.அசோகன் தனது குடும்பத்துடன் வந்து அன்னசாகரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் என்னுடைய குடும்பத்தோடு வந்து ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். மக்கள் அனைவரும் தவராமல் வந்து வாக்களியுங்கள்" எனக் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக இத்தேர்தலில் இளைஞர்களும், முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்துவதை காணமுடிகிறது. இதனிடையே, வெளியிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிழற்பந்தல்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆயிரதது 489 வாக்குச் சாவடிகளில், 967 வாக்குச்சாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. 262 பதற்றமான வாக்குச்சாவடிகளில், 116 இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரும், 148 நுண்பார்வையாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வயது மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை செலுத்த உதவும் வகையில் சாய்வு தளம் மற்றும் சக்கர நாற்கலிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தருமபுரி மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், ஆயிரத்து 300 உள்ளுர் காவலர்களும், 200 சிறப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 744 பாதுகாப்பு படையினர் மற்றும் 320 ஊர் காவல் படையினர், முன்னாள் துணை ராணுவ படையினர் என மொத்தம் 2 ஆயிரத்து 744 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

தருமபுரி: நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்கள் ஜனநாயக கடைமைய செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தருமபுரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ர.அசோகன் தனது குடும்பத்துடன் வந்து அன்னசாகரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் என்னுடைய குடும்பத்தோடு வந்து ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். மக்கள் அனைவரும் தவராமல் வந்து வாக்களியுங்கள்" எனக் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக இத்தேர்தலில் இளைஞர்களும், முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்துவதை காணமுடிகிறது. இதனிடையே, வெளியிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிழற்பந்தல்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆயிரதது 489 வாக்குச் சாவடிகளில், 967 வாக்குச்சாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. 262 பதற்றமான வாக்குச்சாவடிகளில், 116 இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரும், 148 நுண்பார்வையாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வயது மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை செலுத்த உதவும் வகையில் சாய்வு தளம் மற்றும் சக்கர நாற்கலிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தருமபுரி மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், ஆயிரத்து 300 உள்ளுர் காவலர்களும், 200 சிறப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 744 பாதுகாப்பு படையினர் மற்றும் 320 ஊர் காவல் படையினர், முன்னாள் துணை ராணுவ படையினர் என மொத்தம் 2 ஆயிரத்து 744 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.