ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக 3 கம்பெனி துணை ராணுவத்தினர் கோவை வருகை!

Kerala Company Paramilitary forces: நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக, கேரளாவில் இருந்து கோவைக்கு மூன்று கம்பெனி துணை ராணுவத்தினர் ரயில் மூலம் கோவை வந்தனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 10:13 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் கோவை வருகை
நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் கோவை வருகை

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, 3 கம்பெனி துணை ராணுவத்தினர், கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவை வந்தனர். இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, துகுதிப் பங்கீடு, பிரச்சாரம் எனத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக, கேரளாவில் இருந்து கோவைக்கு இன்று 3 கம்பெனி துணை ராணுவத்தினர் ரயில் மூலம் கோவை வந்தனர்.

கேரள மாநிலம், கொச்சினில் இருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம், கோவை ரயில் நிலையம் வந்த துணை ராணுவத்தினரை, தேர்தல் பிரிவு போலீசார் வரவேற்றனர். பின்னர், காவல்துறை பேருந்துகள் மூலம், துணை ராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை மாநகர காவல்துறைக்கு ஒரு கம்பெனி துணை ராணுவத்தினரும், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு ஒரு கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மற்றொரு கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தல் சமயத்தில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயிருக்கு பாதுக்காப்பு இல்லை என கூட்டத்தில் இருந்து வெளியேறிய அதிமுக கவுன்சிலர்களால் பரபரப்பு!

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, 3 கம்பெனி துணை ராணுவத்தினர், கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவை வந்தனர். இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, துகுதிப் பங்கீடு, பிரச்சாரம் எனத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக, கேரளாவில் இருந்து கோவைக்கு இன்று 3 கம்பெனி துணை ராணுவத்தினர் ரயில் மூலம் கோவை வந்தனர்.

கேரள மாநிலம், கொச்சினில் இருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம், கோவை ரயில் நிலையம் வந்த துணை ராணுவத்தினரை, தேர்தல் பிரிவு போலீசார் வரவேற்றனர். பின்னர், காவல்துறை பேருந்துகள் மூலம், துணை ராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை மாநகர காவல்துறைக்கு ஒரு கம்பெனி துணை ராணுவத்தினரும், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு ஒரு கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மற்றொரு கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தல் சமயத்தில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயிருக்கு பாதுக்காப்பு இல்லை என கூட்டத்தில் இருந்து வெளியேறிய அதிமுக கவுன்சிலர்களால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.