ETV Bharat / state

பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் படையப்பா யானை.. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! - Padayappa elephant eating plastic

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 4:21 PM IST

Padayappa elephant: மூணாறில் பிளாஸ்டிக் கழிவுகளை உணவாக எடுத்துக்கொள்ளும் படையப்பா யானையின் வீடியோ காட்சிகள் வெளியாகி வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் உட்கொள்ளும் படையப்பா யானை புகைப்படம்
பிளாஸ்டிக் உட்கொள்ளும் படையப்பா யானை புகைப்படம் (credits -ETV Bharat Tamil Nadu)

படையப்பா யானை குறித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணார் என்பது வனப்பகுதி நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. சாலையோரம் உலா வரும் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்வதும், புகைப்படம் எடுப்பதும் வழக்கமான செயலாகும்.

இந்நிலையில், மூணாறில் படையப்பா காட்டு யானை பொது இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், உணவுகளைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தும், நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளை சேதப்படுத்துவதும் வழக்கம்.

இந்த நிலையில், உணவு தேடி மூணார் அருகே உள்ள கல்லார் பகுதியில் குப்பைகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை தரம் பிரிக்கும் இடத்திற்கு வந்த படையப்பா யானை, அப்பகுதியில் தரம் பிரித்து வைக்கப்பட்டிந்த காய்கறிக் கழிவுகளுடன் அருகில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உணவாக எடுத்துக் கொண்டுள்ளது. தற்போது, இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

குப்பைகளை தரம் பிரிப்பதற்காக சேகரிக்கப்படும் கழிவுகளில் உள்ள காய்கறிகளோடு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும் வீடியோவை பார்த்து வன ஆர்வலர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் படையப்பா யானைக்கு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்ந்து, யானைகளின் அச்சம் இருப்பதால் அச்சத்துடனே வேலைக்குச் சென்று வருவதாக தோட்டத் தொழிலாளிகள் கூறுகின்றனர். எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'அரசியலில் நுழைபவர்களை வரவேற்போம்..குடும்ப அரசியலுக்கும் முக்கியத்துவம் கிடையாது' - குலாம் நபி ஆசாத் பிரத்யேக பேட்டி! - Ghulam Nabi Azad

படையப்பா யானை குறித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணார் என்பது வனப்பகுதி நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. சாலையோரம் உலா வரும் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்வதும், புகைப்படம் எடுப்பதும் வழக்கமான செயலாகும்.

இந்நிலையில், மூணாறில் படையப்பா காட்டு யானை பொது இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், உணவுகளைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தும், நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளை சேதப்படுத்துவதும் வழக்கம்.

இந்த நிலையில், உணவு தேடி மூணார் அருகே உள்ள கல்லார் பகுதியில் குப்பைகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை தரம் பிரிக்கும் இடத்திற்கு வந்த படையப்பா யானை, அப்பகுதியில் தரம் பிரித்து வைக்கப்பட்டிந்த காய்கறிக் கழிவுகளுடன் அருகில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உணவாக எடுத்துக் கொண்டுள்ளது. தற்போது, இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

குப்பைகளை தரம் பிரிப்பதற்காக சேகரிக்கப்படும் கழிவுகளில் உள்ள காய்கறிகளோடு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும் வீடியோவை பார்த்து வன ஆர்வலர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் படையப்பா யானைக்கு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்ந்து, யானைகளின் அச்சம் இருப்பதால் அச்சத்துடனே வேலைக்குச் சென்று வருவதாக தோட்டத் தொழிலாளிகள் கூறுகின்றனர். எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'அரசியலில் நுழைபவர்களை வரவேற்போம்..குடும்ப அரசியலுக்கும் முக்கியத்துவம் கிடையாது' - குலாம் நபி ஆசாத் பிரத்யேக பேட்டி! - Ghulam Nabi Azad

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.