ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்! - DRUGS SEIZED in Chennai Airport

Cocaine drugs seized: கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 35 கோடி ரூபாய் மதிப்புடைய கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 4:19 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அதனால் அவருடைய உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலைக் கண்டுபிடித்து வெளியே எடுத்தனர்.

அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் ஆகும். இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல் தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

இந்த போதைப்பொருளை யாரிடம் கொடுப்பதற்காக இந்தப் பயணி கடத்தி வந்தார்? தீவிரவாதிகள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய இந்த கொக்கைன் போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர், அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். இந்தப் பயணி சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இப்போது விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், இது குறித்து மேலும் எந்த தகவலும் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்தில் 28 கோடி ரூபாய் மதிப்புடைய கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 35 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ.28 கோடி கொக்கைன்.. ராஜஸ்தான் இளைஞர் அதிரடி கைது! - Chennai Airport Cocaine SEIZED

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அதனால் அவருடைய உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலைக் கண்டுபிடித்து வெளியே எடுத்தனர்.

அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் ஆகும். இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல் தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

இந்த போதைப்பொருளை யாரிடம் கொடுப்பதற்காக இந்தப் பயணி கடத்தி வந்தார்? தீவிரவாதிகள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய இந்த கொக்கைன் போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர், அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். இந்தப் பயணி சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இப்போது விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், இது குறித்து மேலும் எந்த தகவலும் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்தில் 28 கோடி ரூபாய் மதிப்புடைய கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 35 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ.28 கோடி கொக்கைன்.. ராஜஸ்தான் இளைஞர் அதிரடி கைது! - Chennai Airport Cocaine SEIZED

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.