ETV Bharat / state

கனமழை எதிரொலி; மண்சரிவால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து! - METTUPALAYAM OOTY TRAIN CANCEL

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 1:40 PM IST

METTUPALAYAM OOTY TRAIN CANCEL: நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே அடர்லி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுபாளையம் ஊட்டி ரயில்
மேட்டுபாளையம் ஊட்டி ரயில் (credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றான ஊட்டி மலை ரயில், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும், அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.

இருப்பினும், மழைக் காலங்களில் இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுவதால், தண்டவாளங்கள் சேதமடைந்து ரயில் ரத்தாவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் காற்றில் சாய்ந்தும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த மலை ரயில் பாதையில் ஆர்டர்லி ஹில் க்ரோ இடையே மண்சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் புறப்பட்ட மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கே திரும்ப சென்றது.

பின்னர், ரயில் இயக்கப்படாததால் ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் பேருந்துகளிலும் வாடகை வாகனங்களிலும் ஊட்டிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தொடரும் மழை காரணமாக இந்த மாதத்தில் பலமுறை மலை ரயில் பாதையில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் ரத்து செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: திரையுலகில் முதல் நபராக உதவிக்கரம் நீட்டிய விக்ரம்! - Vikram fund for wayanad landslide

நீலகிரி: நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றான ஊட்டி மலை ரயில், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும், அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.

இருப்பினும், மழைக் காலங்களில் இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுவதால், தண்டவாளங்கள் சேதமடைந்து ரயில் ரத்தாவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் காற்றில் சாய்ந்தும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த மலை ரயில் பாதையில் ஆர்டர்லி ஹில் க்ரோ இடையே மண்சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் புறப்பட்ட மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கே திரும்ப சென்றது.

பின்னர், ரயில் இயக்கப்படாததால் ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் பேருந்துகளிலும் வாடகை வாகனங்களிலும் ஊட்டிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தொடரும் மழை காரணமாக இந்த மாதத்தில் பலமுறை மலை ரயில் பாதையில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் ரத்து செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: திரையுலகில் முதல் நபராக உதவிக்கரம் நீட்டிய விக்ரம்! - Vikram fund for wayanad landslide

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.