ETV Bharat / state

My V3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்தன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரண்டர்! - Myv3 Ads sakthi anandhan surrender

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 5:19 PM IST

MyV3 Ads: மைவி3 ஆட்ஸ் செயலியில் விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, மோசடி செய்த வழக்கில் கோவையைச் சேர்ந்த மைவி3 ஆட்ஸ் செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த சக்தி ஆனந்தன்
My V3 Ads சக்தி ஆனந்தன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மைவி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் ரூ.5 முதல் ரூ.1,500 வரை வரும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சக்தி ஆனந்தன் சென்னை நிதிநிறுவன மோசடி வழக்ககளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் சரணடைந்தார்.

அவரை ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் ஜாமீன் கோரியும், சிறையில் முதல் வகுப்பு வழங்கக் கோரியும் சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க : காருக்குள் கஞ்சா குடோன்.. ஷாக்கான போலீஸ்.. நாகையில் பரபரப்பு சம்பவம்! - ganja hidden in car

சென்னை: மைவி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் ரூ.5 முதல் ரூ.1,500 வரை வரும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சக்தி ஆனந்தன் சென்னை நிதிநிறுவன மோசடி வழக்ககளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் சரணடைந்தார்.

அவரை ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் ஜாமீன் கோரியும், சிறையில் முதல் வகுப்பு வழங்கக் கோரியும் சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க : காருக்குள் கஞ்சா குடோன்.. ஷாக்கான போலீஸ்.. நாகையில் பரபரப்பு சம்பவம்! - ganja hidden in car

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.