ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம்! - Ulundurpet Omni Bus Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 2:19 PM IST

Ulundurpet Omni Bus Accident: உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை விபத்து
Ulundurpet Omni Bus Accident

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாகர்கோயிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இந்தப் பேருந்தானது, இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டையில் மோதி, தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பாலம் கட்டுமான பணி தொடர்பான எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாததால் தடுப்பு கட்டையில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலருக்கு கை, கால் மற்றும் தலை பகுதிகளில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஆம்னி பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? - Schools Education Department

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாகர்கோயிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இந்தப் பேருந்தானது, இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டையில் மோதி, தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பாலம் கட்டுமான பணி தொடர்பான எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாததால் தடுப்பு கட்டையில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலருக்கு கை, கால் மற்றும் தலை பகுதிகளில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஆம்னி பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? - Schools Education Department

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.