ETV Bharat / state

பணம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது: நடிகர் ஆனந்த் ராஜ் வேதனை.! - Tamil Nadu lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 7:50 PM IST

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏன் இவ்வளவு அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுகிறது என தெரியவில்லை எனவும் இதன் முடிவுக்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியது அவஸ்தை நடிகர் ஆனந்த் ராஜ் எனவும் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தை பொருத்த வரை வாக்கிற்கு பணம் கொடுக்கப்படுகிறதே என நிருபர் கேள்வி எழுப்பிய நிலையில், அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் இது மாறவில்லை எனவும் பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும், பணம் வாங்காமல், ஒருவருக்கும் வளைந்து கொடுக்காமலும் இருப்பதால்தான் தன்னால் நெஞ்சை நிமிர்திக்கொண்டு பேச முடிகிறது என தெரிவித்த ஆனந்த் ராஜ் தெரிவித்தார். வாக்கிற்கு பணம் வாங்காமல் வாக்களித்து, கேள்வி கேட்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழகத்தில் ஏன் ஒரே கட்டமாக அதுவும் இவ்வளவு அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுகிறது என தெரியவில்லை என குறிப்பிட்ட ஆனந்த் ராஜ், வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தலை நடத்தி இருந்திருக்கலாம் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: மதவாத சக்திகளுக்கு எதிராக ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: பா.ரஞ்சித் வேண்டுகோள்.! - Tamil Nadu Lok Sabha Election

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தை பொருத்த வரை வாக்கிற்கு பணம் கொடுக்கப்படுகிறதே என நிருபர் கேள்வி எழுப்பிய நிலையில், அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் இது மாறவில்லை எனவும் பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும், பணம் வாங்காமல், ஒருவருக்கும் வளைந்து கொடுக்காமலும் இருப்பதால்தான் தன்னால் நெஞ்சை நிமிர்திக்கொண்டு பேச முடிகிறது என தெரிவித்த ஆனந்த் ராஜ் தெரிவித்தார். வாக்கிற்கு பணம் வாங்காமல் வாக்களித்து, கேள்வி கேட்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழகத்தில் ஏன் ஒரே கட்டமாக அதுவும் இவ்வளவு அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுகிறது என தெரியவில்லை என குறிப்பிட்ட ஆனந்த் ராஜ், வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தலை நடத்தி இருந்திருக்கலாம் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: மதவாத சக்திகளுக்கு எதிராக ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: பா.ரஞ்சித் வேண்டுகோள்.! - Tamil Nadu Lok Sabha Election

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.