ETV Bharat / state

நீட் விலக்கு தனித் தீர்மானம்; சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுவது என்ன? - TN assembly session 2024

NEET Exemption resolution: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை வரவேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்த கருத்துகளின் தொகுப்பை இங்கு காணாலாம்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 4:26 PM IST

Updated : Jun 28, 2024, 4:41 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கருத்துகள் பகிர்ந்த சட்டமன்ற உறுப்பினர்
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கருத்துகள் பகிர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய (வெள்ளிக்கிழமை) சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானத்தின் போது அவர் பேசும் போது, "கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையில், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து பள்ளிக் கல்வியில் 12ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இந்த சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் இந்த தேர்வு முறையை பல மாநிலங்கள் எதிர்த்து வருகிறது. தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணைச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்: "நீட் என்ற தேர்வு எளிய மாணவர்களை மருத்துவக் கல்விக்கு நுழைய விடாமல் தடுப்பது. நீட் பயிற்சி மையத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

UPSC தேர்விலும் முறைகேடுகள் நடத்தப்பட்டதையும் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் விலக்கு சட்டத்தைக் கொண்டு வருமாறு, கூட்டணி கட்சியோடு இணைந்து திமுக நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்" என தெரிவித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்: "அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கூடாது என்று சொல்லும் நிலை வந்துள்ளது. ஏன் ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்? அங்கு தான் முறைகேடு நடக்கிறது. மற்ற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேர்வது குறைவு.

ஆனால், மற்ற மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேர்கிறார்கள். நீட் தேர்வு கண்டிப்பாக நம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. எந்த அளவிற்குச் சென்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தீர்மானத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது" எனக் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: "தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த சிறந்த மருத்துவர்களும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று எம்பிபிஎஸ், எம்டிஎஸ் படித்து மருத்துவராக ஆகவில்லை. நீட் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும். National Testing Agency அல்ல, National troubling agency. நுழைவுத் தேர்வு நடத்த எந்த தகுதியும் என்டிஏவுக்கு இல்லை" என பேசினார்.

மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை: "கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு கல்வி ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது. நீட் போன்ற தேர்வு எதிர்காலத்தில் தேவையில்லை. கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் படிக்க வர வேண்டும் என்று முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமசந்திரன்: "தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று குரல் ஒலித்துக் கொண்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் தீர்மானத்தை வரவேற்கிறேன்" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ நாகை மாலி: மிருக வதை தடைச் சட்டம் மத்திய அரசு பட்டியலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று தெரிவித்த போது, மக்கள் இணைந்து போராடியதால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தளர்வு அளித்தது. ஜல்லிக்கட்டு தளர்வு போல நீட் தேர்வுக்கு தளர்வு தர வேண்டும் என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்" எனக் கூறினார்.

விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ்: "தமிழ்நாடிற்கு மட்டும் தான் நீட் தேர்வின் ஆபத்து புரிந்தது. தமிழக முதலமைச்சர் மட்டும் தான் எல்லா மாநில முதலமைச்சருக்கும் கடிதம் எழுதினார். அப்பொழுது கூட பெரிய வரவேற்பு இல்லை, அதற்கும் நம்மை கேலி செய்தார்கள். இன்று காலம் உணர்த்தி இருக்கிறது.

தமிழ்நாடு எடுத்த நீட் விலக்கு மசோதா நியாயமானது என்று ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் ஒரு புரிதலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் வேண்டும் என்று சொல்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ளாதது சட்டவிரோதம்.

உச்ச நீதிமன்றம் சொன்னதற்கு மத்திய அரசு எவ்வளவு இடங்களில் மறுத்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் கூறினால் அதை ஏற்றுக்கொள்வது போல நீட் தேர்வில் பாவனை காட்டுகிறார்கள். நீட் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கல்வி தொடர்பான விஷயங்களில் நாம் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், அதில் எந்த சமரசமும் செய்வதில்லை. முதலமைச்சரின் நீட் தொடர்பாக கொண்டு வந்திருக்கிற தனித்தீர்மானத்தை விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வரவேற்கிறேன். இதுபோன்ற விஷயங்களில் எப்பொழுதும் நாங்கள் துணையாக இருப்போம்" என தெரிவித்தார்.

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி: "நீட் தேர்வால் வெளிமாநில மாணவர்கள் தமிழகத்திற்குள் உள்நுழைந்து விடுகின்றனர். இந்த தீர்மானம் தமிழகத்தின் உரிமையைக் காக்கும் தீர்மானம். நுழைவுத் தேர்வுகள் நுழையாமல் இருக்க இந்த தீர்மானம் உதவும். இந்த தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது" என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: "தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிற மாநிலம், முதலமைச்சர் தமிழ்நாட்டில் நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், இந்தியா முழுவதும் இந்த தீர்மானம் பிரதிபலிக்கப்படுகிறது என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெளிவாக தெரிவித்தார்.

கிராமப்புற மாணவ, மாணவிகளை பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். பல்கலைக்கழகங்களை உருவாக்குவது மாநில அரசு, ஆனால் மாணவர்கள் சேர்கை நடத்துவது மத்திய அரசு. முதலமைச்சர் கொண்டுவந்த நீட் விலக்கு மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வழிமொழிகிறேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் விலக்கு தீர்மானம்; கள்ளக்குறிச்சி விவகாரத்தை மடைமாற்ற திமுக நாடகம் - எடப்பாடி குற்றச்சாட்டு!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய (வெள்ளிக்கிழமை) சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானத்தின் போது அவர் பேசும் போது, "கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையில், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து பள்ளிக் கல்வியில் 12ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இந்த சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் இந்த தேர்வு முறையை பல மாநிலங்கள் எதிர்த்து வருகிறது. தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணைச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்: "நீட் என்ற தேர்வு எளிய மாணவர்களை மருத்துவக் கல்விக்கு நுழைய விடாமல் தடுப்பது. நீட் பயிற்சி மையத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

UPSC தேர்விலும் முறைகேடுகள் நடத்தப்பட்டதையும் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் விலக்கு சட்டத்தைக் கொண்டு வருமாறு, கூட்டணி கட்சியோடு இணைந்து திமுக நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்" என தெரிவித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்: "அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கூடாது என்று சொல்லும் நிலை வந்துள்ளது. ஏன் ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்? அங்கு தான் முறைகேடு நடக்கிறது. மற்ற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேர்வது குறைவு.

ஆனால், மற்ற மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேர்கிறார்கள். நீட் தேர்வு கண்டிப்பாக நம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. எந்த அளவிற்குச் சென்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தீர்மானத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது" எனக் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: "தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த சிறந்த மருத்துவர்களும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று எம்பிபிஎஸ், எம்டிஎஸ் படித்து மருத்துவராக ஆகவில்லை. நீட் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும். National Testing Agency அல்ல, National troubling agency. நுழைவுத் தேர்வு நடத்த எந்த தகுதியும் என்டிஏவுக்கு இல்லை" என பேசினார்.

மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை: "கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு கல்வி ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது. நீட் போன்ற தேர்வு எதிர்காலத்தில் தேவையில்லை. கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் படிக்க வர வேண்டும் என்று முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமசந்திரன்: "தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று குரல் ஒலித்துக் கொண்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் தீர்மானத்தை வரவேற்கிறேன்" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ நாகை மாலி: மிருக வதை தடைச் சட்டம் மத்திய அரசு பட்டியலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று தெரிவித்த போது, மக்கள் இணைந்து போராடியதால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தளர்வு அளித்தது. ஜல்லிக்கட்டு தளர்வு போல நீட் தேர்வுக்கு தளர்வு தர வேண்டும் என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்" எனக் கூறினார்.

விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ்: "தமிழ்நாடிற்கு மட்டும் தான் நீட் தேர்வின் ஆபத்து புரிந்தது. தமிழக முதலமைச்சர் மட்டும் தான் எல்லா மாநில முதலமைச்சருக்கும் கடிதம் எழுதினார். அப்பொழுது கூட பெரிய வரவேற்பு இல்லை, அதற்கும் நம்மை கேலி செய்தார்கள். இன்று காலம் உணர்த்தி இருக்கிறது.

தமிழ்நாடு எடுத்த நீட் விலக்கு மசோதா நியாயமானது என்று ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் ஒரு புரிதலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் வேண்டும் என்று சொல்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ளாதது சட்டவிரோதம்.

உச்ச நீதிமன்றம் சொன்னதற்கு மத்திய அரசு எவ்வளவு இடங்களில் மறுத்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் கூறினால் அதை ஏற்றுக்கொள்வது போல நீட் தேர்வில் பாவனை காட்டுகிறார்கள். நீட் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கல்வி தொடர்பான விஷயங்களில் நாம் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், அதில் எந்த சமரசமும் செய்வதில்லை. முதலமைச்சரின் நீட் தொடர்பாக கொண்டு வந்திருக்கிற தனித்தீர்மானத்தை விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வரவேற்கிறேன். இதுபோன்ற விஷயங்களில் எப்பொழுதும் நாங்கள் துணையாக இருப்போம்" என தெரிவித்தார்.

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி: "நீட் தேர்வால் வெளிமாநில மாணவர்கள் தமிழகத்திற்குள் உள்நுழைந்து விடுகின்றனர். இந்த தீர்மானம் தமிழகத்தின் உரிமையைக் காக்கும் தீர்மானம். நுழைவுத் தேர்வுகள் நுழையாமல் இருக்க இந்த தீர்மானம் உதவும். இந்த தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது" என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: "தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிற மாநிலம், முதலமைச்சர் தமிழ்நாட்டில் நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், இந்தியா முழுவதும் இந்த தீர்மானம் பிரதிபலிக்கப்படுகிறது என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெளிவாக தெரிவித்தார்.

கிராமப்புற மாணவ, மாணவிகளை பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். பல்கலைக்கழகங்களை உருவாக்குவது மாநில அரசு, ஆனால் மாணவர்கள் சேர்கை நடத்துவது மத்திய அரசு. முதலமைச்சர் கொண்டுவந்த நீட் விலக்கு மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வழிமொழிகிறேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் விலக்கு தீர்மானம்; கள்ளக்குறிச்சி விவகாரத்தை மடைமாற்ற திமுக நாடகம் - எடப்பாடி குற்றச்சாட்டு!

Last Updated : Jun 28, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.