ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Rameshwaram fishermen

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 5:07 PM IST

Rameshwaram fishermen: இலங்கை கடற்படையில் ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மீனவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி வந்தாக கூறி இலங்கை கடற்படையின் ரோந்து படகு மூலம் சிறைப்பிடிக்க முயன்றபோது, ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. இதில் நான்கு மீனவர்கள் மாயமான நிலையில் மூவர் மீட்கப்பட்டனர். அதில் மலைச்சாமி என்பவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உயிரிழந்தார். மீதமுள்ள இருவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்து ராமநாதபுரம் மீனவர்கள் இன்று மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்துச் சென்றனர்.

இதனிடையே, ராமநாதபுரம் மீனவர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (54), முத்துமுனியாண்டி (57), மலைச்சாமி (59) மற்றும் ராமச்சந்திரன் (64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது.

இச்சம்பவத்தை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் பலி.. ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

சென்னை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி வந்தாக கூறி இலங்கை கடற்படையின் ரோந்து படகு மூலம் சிறைப்பிடிக்க முயன்றபோது, ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. இதில் நான்கு மீனவர்கள் மாயமான நிலையில் மூவர் மீட்கப்பட்டனர். அதில் மலைச்சாமி என்பவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உயிரிழந்தார். மீதமுள்ள இருவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்து ராமநாதபுரம் மீனவர்கள் இன்று மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்துச் சென்றனர்.

இதனிடையே, ராமநாதபுரம் மீனவர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (54), முத்துமுனியாண்டி (57), மலைச்சாமி (59) மற்றும் ராமச்சந்திரன் (64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது.

இச்சம்பவத்தை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் பலி.. ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.