ETV Bharat / state

மதுரையில் தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்! - முக அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்

M.K.Alagiri: கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது தாசில்தாரை தாக்கிய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (பிப்.9) நேரில் ஆஜராகினர்.

madurai district court
மதுரை மாவட்ட நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 2:03 PM IST

Updated : Feb 9, 2024, 7:06 PM IST

மதுரை: கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன் பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாரருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள் கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு மு.க.அழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து, கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (பிப்.9) இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட நீதிபதி முன்பு வந்தது. அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.

இதையும் படிங்க: கனிமவள நிறுவனங்களிடம் ராயல்டி வரி வசூலிக்கத் தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

மதுரை: கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன் பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாரருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள் கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு மு.க.அழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து, கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (பிப்.9) இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட நீதிபதி முன்பு வந்தது. அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.

இதையும் படிங்க: கனிமவள நிறுவனங்களிடம் ராயல்டி வரி வசூலிக்கத் தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

Last Updated : Feb 9, 2024, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.