ETV Bharat / state

தந்தை உதவியுடன் இளைஞரை கொலை செய்த சிறுவன்..! நெல்லையில் நடந்த கொடூர சம்பவம் - Youth Murder Case in Tirunelveli

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 2:35 PM IST

Youth Murder Case in Tirunelveli: நெல்லை அருகே 15வயது சிறுவன் தனது தந்தையின் உதவியுடன் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி, அன்பு(32). இவரது பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து, இவர் தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். இவர் தனது பணிகளை முடித்து விட்டு, அப்பகுதியில் உள்ள கலையரங்கத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல் நேற்றிரவு தனது பணிகளை முடித்து விட்டு, இரவு மது அருந்திவிட்டு கலையரங்கத்திலேயே தூங்கியுள்ளார். இதனை அடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை அவ்வழியாக சென்றவர்கள் அன்பு-வின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சிவந்திபட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்கு முயன்றுள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது உறவினர்கள், குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தி, அன்பு-வின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை நடந்த பகுதியில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 15 வயது சிறுவன், தனது தந்தை வேல் என்பவரின் கண்காணிப்பில் இந்த கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருப்பதாகவும், இதனடிப்படையில் விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், கொலை செய்ததாக மகனும், தந்தையும் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கொலை செய்யப்பட்ட அன்பு மற்றும் அச்சிறுவனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்த சிறுவன் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், நொச்சிக்குளம் கிராமத்தில் அண்மைக் காலமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து விட்டதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட அன்பு என்பவரின் சகோதரிக்கு வரும் வெள்ளிக்கிழமை அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில், இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: திருவள்ளூரில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி, அன்பு(32). இவரது பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து, இவர் தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். இவர் தனது பணிகளை முடித்து விட்டு, அப்பகுதியில் உள்ள கலையரங்கத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல் நேற்றிரவு தனது பணிகளை முடித்து விட்டு, இரவு மது அருந்திவிட்டு கலையரங்கத்திலேயே தூங்கியுள்ளார். இதனை அடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை அவ்வழியாக சென்றவர்கள் அன்பு-வின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சிவந்திபட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்கு முயன்றுள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது உறவினர்கள், குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தி, அன்பு-வின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை நடந்த பகுதியில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 15 வயது சிறுவன், தனது தந்தை வேல் என்பவரின் கண்காணிப்பில் இந்த கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருப்பதாகவும், இதனடிப்படையில் விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், கொலை செய்ததாக மகனும், தந்தையும் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கொலை செய்யப்பட்ட அன்பு மற்றும் அச்சிறுவனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்த சிறுவன் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், நொச்சிக்குளம் கிராமத்தில் அண்மைக் காலமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து விட்டதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட அன்பு என்பவரின் சகோதரிக்கு வரும் வெள்ளிக்கிழமை அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில், இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: திருவள்ளூரில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.