ETV Bharat / state

32 குளங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு; திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை எச்சரித்த ஐகோர்ட்! - ponds encroachment case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 7:18 PM IST

Madras High Court: திருவண்ணாமலை நகரில் உள்ள 32 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை மற்றும் அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய மூன்று வாரங்கள் அவகாசம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள 138 குளங்களில் 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், இந்தக் குளங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(ஆக 05) விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள், அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் கூட்டாக இணைந்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், உயர் நீதிமன்றமே ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலாளர் தலைமையில் சுதந்திரமான குழு அமைத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்து விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள 138 குளங்களில் 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், இந்தக் குளங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(ஆக 05) விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள், அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் கூட்டாக இணைந்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், உயர் நீதிமன்றமே ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலாளர் தலைமையில் சுதந்திரமான குழு அமைத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்து விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கணவனைக் கொன்றதாக வழக்கு; மனைவியின் ஆயுள் தண்டனை ரத்து! - Madras High Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.