ETV Bharat / state

விவாகரத்து வழக்கு; தம்பதியை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது.. ஐகோர்ட் உத்தரவு!

விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட தம்பதியரை நேரில் ஆஜராகும்படி கட்டாயப்படுத்தாமல், காணொலியில் விசாரித்து விவாகரத்து வழங்கலாம் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை: அமெரிக்காவில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து வழங்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கில் ஆஜராக விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர இயலாததால், காணொலி காட்சி மூலம் ஆஜராகிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய சென்னை குடும்ப நல நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையும் படிங்க: “ஒப்பந்த செவிலியர்களுக்கும் மகப்பேறு பலன்கள் பெற உரிமை உள்ளது” - உயர் நீதிமன்றம்!

இதை எதிர்த்து அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியரின், மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், குற்ற வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராவது கட்டாயம் என கூற முடியும். பிற வழக்குகளில், குறிப்பாக, விவாகரத்து வழக்குகளில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும்.

நேரில் ஆஜராக வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், பரஸ்பரம் விவாகரத்து கோரி தம்பதியின் பொது அதிகாரம் பெற்றவர்கள் வழக்குகளை தாக்கல் செய்யலாம். காணொலி மூலமே வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்திக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: அமெரிக்காவில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து வழங்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கில் ஆஜராக விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர இயலாததால், காணொலி காட்சி மூலம் ஆஜராகிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய சென்னை குடும்ப நல நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையும் படிங்க: “ஒப்பந்த செவிலியர்களுக்கும் மகப்பேறு பலன்கள் பெற உரிமை உள்ளது” - உயர் நீதிமன்றம்!

இதை எதிர்த்து அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியரின், மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், குற்ற வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராவது கட்டாயம் என கூற முடியும். பிற வழக்குகளில், குறிப்பாக, விவாகரத்து வழக்குகளில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும்.

நேரில் ஆஜராக வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், பரஸ்பரம் விவாகரத்து கோரி தம்பதியின் பொது அதிகாரம் பெற்றவர்கள் வழக்குகளை தாக்கல் செய்யலாம். காணொலி மூலமே வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்திக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.