ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக் கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 4:02 PM IST

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் கனகராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாட்டில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்த மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களை இதுவரை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறைந்து, மக்கள் பயனடைவார்கள்.

ஆனால், மத்திய ஜி.எஸ்.டி சட்டப்படியும், ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைப்படியும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர இயலவில்லை.

மேலும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவும், நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2023ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம், பெட்ரோலியத் துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை மனு: ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? - நீதிமன்றம் அதிருப்தி!

அப்போது மனுதாரர் கனகராஜ், "வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு, தற்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குகிறோம். அதனால், ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலை, 60 முதல் 70 ரூபாயாக குறையும்" என தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நீதிபதிகள், "இது அரசின் கொள்கை முடிவு என்பதால், அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதனை அடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கடந்த 2020ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டதாகவும், இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க கோரினார்.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் கனகராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாட்டில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்த மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களை இதுவரை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறைந்து, மக்கள் பயனடைவார்கள்.

ஆனால், மத்திய ஜி.எஸ்.டி சட்டப்படியும், ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைப்படியும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர இயலவில்லை.

மேலும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவும், நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2023ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம், பெட்ரோலியத் துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை மனு: ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? - நீதிமன்றம் அதிருப்தி!

அப்போது மனுதாரர் கனகராஜ், "வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு, தற்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குகிறோம். அதனால், ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலை, 60 முதல் 70 ரூபாயாக குறையும்" என தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நீதிபதிகள், "இது அரசின் கொள்கை முடிவு என்பதால், அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதனை அடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கடந்த 2020ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டதாகவும், இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க கோரினார்.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.