ETV Bharat / state

கும்பகோணம் டூ சிங்கப்பூர் செல்லும் லீ குவான் யூ சிலை.. காரணம் என்ன? - LEE KUAN YEW Statue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 5:30 PM IST

LEE KUAN YEW Statue: கும்பகோணம் திருவலஞ்சுழியில் மறைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டு சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

சிங்கப்பூரின் முறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ சிலை
சிங்கப்பூரின் முறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ சிலை (Credit -ETVBharat TamilNadu)

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை மற்றும் திருவலஞ்சுழி பகுதிகள் திருக்கோயில்களுக்குத் தேவையான ஐம்பொன் சிலைகள் தயார் செய்வதில் உலக அளவில் பிரசித்தி பெற்றவையாகும். இங்கு, சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி என அழைக்கப்படும் சிங்கப்பூரின் முறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் சாய் கணேஷ் சிற்ப கூட சிற்பிகள் (Credit -ETVBharat TamilNadu)

தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் பெரிதும் உறுதுணையாக செயல்பட்டவர் எனக் கருதப்படும் லீ குவான் யூவால், தமிழர்கள் இன்றளவும் சிங்கப்பூரில் தொழிலதிபர்களாகவும், எண்ணற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபரான கருணாநிதி, தனது வளர்ச்சி மற்றும் நிறுவன வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த மறைந்த பிரதமரின் நினைவைப் போற்றி புகழ்ந்திடும் வகையில், அவரது முழுவுருவ வெண்கலச் சிலையினை வடிவமைத்து தனது சிங்கப்பூர் அலுவலகத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளார்.

லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இராஜராஜ சோழனின் சிலை
லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இராஜராஜ சோழனின் சிலை (Credit -ETVBharat TamilNadu)

இதனையடுத்து, கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சாய் கணேஷ் சிற்பக் கூட ஸ்தபதிகளான வேதா இராமலிங்கம் மற்றும் அவரது மகன் வேதாச்சலம் ஆகியோரிடம் இதற்கான பணியினை கடந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் ஒப்படைத்துள்ளார் கருணாநிதி.

தற்போது இந்த முழுவுருவ வெண்கலச்சிலை உருவாக்கம் வேதா டெம்பிள் ஒர்க்ஸ் நிறுவனம் வாயிலாக ஆறு மாத உழைப்பில், 6 அடி உயரம், இரண்டு அடி அகலம், 150 கிலோ எடையில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளது. இது இன்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து சிங்கப்பூர் கொண்டு சென்று தொழிலதிபர் கருணாநிதியின் நிறுவனத்தில் நிறுவப்படவுள்ளது.

அதே நேரத்தில், சிங்கப்பூர் தொழிலதிபர் கருணாநிதியின் சென்னை அலுவலகத்தில் நிறுவ, இதே சிற்ப கூடத்தில் தெற்காசியாவைக் கட்டியாண்ட சோழ மாமன்னன் இராஜராஜனின் முழுவுருவ வெண்கலச் சிலை உருவாக்கவும் பணித்திருந்தார். இந்த சிலையும் தற்போது 7.5 அடி உயரம், 2.5 அடி அகலம், 350 கிலோ எடையில் ரூபாய் 4.5 லட்சம் மதிப்பீட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: ஓராண்டாக சிறையில் செந்தில் பாலாஜி.. 2023 ஜூன் 14 முதல் 2024 ஜூன் 14 வரை வழக்கின் பாதை! - senthil balaji case

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை மற்றும் திருவலஞ்சுழி பகுதிகள் திருக்கோயில்களுக்குத் தேவையான ஐம்பொன் சிலைகள் தயார் செய்வதில் உலக அளவில் பிரசித்தி பெற்றவையாகும். இங்கு, சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி என அழைக்கப்படும் சிங்கப்பூரின் முறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் சாய் கணேஷ் சிற்ப கூட சிற்பிகள் (Credit -ETVBharat TamilNadu)

தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் பெரிதும் உறுதுணையாக செயல்பட்டவர் எனக் கருதப்படும் லீ குவான் யூவால், தமிழர்கள் இன்றளவும் சிங்கப்பூரில் தொழிலதிபர்களாகவும், எண்ணற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபரான கருணாநிதி, தனது வளர்ச்சி மற்றும் நிறுவன வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த மறைந்த பிரதமரின் நினைவைப் போற்றி புகழ்ந்திடும் வகையில், அவரது முழுவுருவ வெண்கலச் சிலையினை வடிவமைத்து தனது சிங்கப்பூர் அலுவலகத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளார்.

லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இராஜராஜ சோழனின் சிலை
லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இராஜராஜ சோழனின் சிலை (Credit -ETVBharat TamilNadu)

இதனையடுத்து, கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சாய் கணேஷ் சிற்பக் கூட ஸ்தபதிகளான வேதா இராமலிங்கம் மற்றும் அவரது மகன் வேதாச்சலம் ஆகியோரிடம் இதற்கான பணியினை கடந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் ஒப்படைத்துள்ளார் கருணாநிதி.

தற்போது இந்த முழுவுருவ வெண்கலச்சிலை உருவாக்கம் வேதா டெம்பிள் ஒர்க்ஸ் நிறுவனம் வாயிலாக ஆறு மாத உழைப்பில், 6 அடி உயரம், இரண்டு அடி அகலம், 150 கிலோ எடையில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளது. இது இன்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து சிங்கப்பூர் கொண்டு சென்று தொழிலதிபர் கருணாநிதியின் நிறுவனத்தில் நிறுவப்படவுள்ளது.

அதே நேரத்தில், சிங்கப்பூர் தொழிலதிபர் கருணாநிதியின் சென்னை அலுவலகத்தில் நிறுவ, இதே சிற்ப கூடத்தில் தெற்காசியாவைக் கட்டியாண்ட சோழ மாமன்னன் இராஜராஜனின் முழுவுருவ வெண்கலச் சிலை உருவாக்கவும் பணித்திருந்தார். இந்த சிலையும் தற்போது 7.5 அடி உயரம், 2.5 அடி அகலம், 350 கிலோ எடையில் ரூபாய் 4.5 லட்சம் மதிப்பீட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: ஓராண்டாக சிறையில் செந்தில் பாலாஜி.. 2023 ஜூன் 14 முதல் 2024 ஜூன் 14 வரை வழக்கின் பாதை! - senthil balaji case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.