ETV Bharat / state

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு; 2 ஆயிரம் தொழிலாளர்களின் நிலை என்ன? - Manjolai Estate Issue

Manjolai Estate Issue: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக விருப்ப ஓய்வு செய்ய வைக்கக்கூடாது எனவும், மாஞ்சோலையில் இயங்கும் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை முன்வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:38 AM IST

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் பேட்டி புகைப்படம்
முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் பேட்டி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலு முத்து, ஊத்து காக்காச்சி என பல்வேறு மலைக் கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வாழும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்குள்ள தேயிலை தோட்டப் பணிகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த தேயிலை தோட்டப்பகுதி சிங்கம்பட்டி சமஸ்தானம் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில், 1929ஆம் ஆண்டு 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் மூலம் தேயிலைத் தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு, சுற்று வட்டாரத்தில் உள்ள 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 2028ஆம் ஆண்டுடன் அந்த நிறுவனத்திற்கான குத்தகை ஒப்பந்தம் நிறைவு பெற உள்ள நிலையில், அந்த இடத்தை ராயத்துவாரி பட்டா வழங்கக்கோரி நீதிமன்றத்தில் பிபிடிசி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு தொடர்ந்தது. ஆனால், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் தேயிலைத் தோட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களை காலி செய்வதற்கு தேயிலைத் தோட்ட நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது, தொழிலாளர்களை விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் 15ஆம் தேதிக்குள் அவர்களை அதில் கையெழுத்திட கட்டாயப்படுத்தி வருவதாகவும், ஆகையால் அப்பகுதியில் பல தலைமுறைகளாக பணி செய்து வரும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டம் மக்கள் நலச்சங்கம் சார்பில் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விசிக, அமமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கூட்டத்தின் முடிவில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகம் வலுக்கட்டாயமாக தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வு கடிதம் பெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2028ஆம் ஆண்டு வரை மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வண்ணம் செயல்படும் தேயிலை தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், "மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகம் பல தலைமுறைகளாக வாழும் மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மாஞ்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக நிறுவப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருப்பதும், படிக்கும் மாணவர்களை வெளியே சென்று படிக்க வற்புறுத்தும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து உறுதியான முடிவெடுக்க ஜூன் 7ஆம் தேதி அனைத்து கட்சியினர் சார்பில் கோரிக்கை வைக்க இருப்பதாகவும், அனைத்து கட்சியினரும் ஒன்று திரண்டு வரும் 8ஆம் தேதி மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலு முத்து, ஊத்து காக்காச்சி என பல்வேறு மலைக் கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வாழும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்குள்ள தேயிலை தோட்டப் பணிகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த தேயிலை தோட்டப்பகுதி சிங்கம்பட்டி சமஸ்தானம் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில், 1929ஆம் ஆண்டு 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் மூலம் தேயிலைத் தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு, சுற்று வட்டாரத்தில் உள்ள 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 2028ஆம் ஆண்டுடன் அந்த நிறுவனத்திற்கான குத்தகை ஒப்பந்தம் நிறைவு பெற உள்ள நிலையில், அந்த இடத்தை ராயத்துவாரி பட்டா வழங்கக்கோரி நீதிமன்றத்தில் பிபிடிசி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு தொடர்ந்தது. ஆனால், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் தேயிலைத் தோட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களை காலி செய்வதற்கு தேயிலைத் தோட்ட நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது, தொழிலாளர்களை விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் 15ஆம் தேதிக்குள் அவர்களை அதில் கையெழுத்திட கட்டாயப்படுத்தி வருவதாகவும், ஆகையால் அப்பகுதியில் பல தலைமுறைகளாக பணி செய்து வரும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டம் மக்கள் நலச்சங்கம் சார்பில் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விசிக, அமமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கூட்டத்தின் முடிவில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகம் வலுக்கட்டாயமாக தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வு கடிதம் பெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2028ஆம் ஆண்டு வரை மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வண்ணம் செயல்படும் தேயிலை தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், "மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகம் பல தலைமுறைகளாக வாழும் மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மாஞ்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக நிறுவப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருப்பதும், படிக்கும் மாணவர்களை வெளியே சென்று படிக்க வற்புறுத்தும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து உறுதியான முடிவெடுக்க ஜூன் 7ஆம் தேதி அனைத்து கட்சியினர் சார்பில் கோரிக்கை வைக்க இருப்பதாகவும், அனைத்து கட்சியினரும் ஒன்று திரண்டு வரும் 8ஆம் தேதி மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.