ETV Bharat / state

பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு தடை கோரிய வழக்கு; மேலும் ஒருவர் மேல்முறையீடு! - Angapradakshinam on leaves case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 8:06 PM IST

Madurai Bench: பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதி மன்ற மதுரைக்கிளை
உயர்நீதி மன்ற மதுரைக்கிளை (credits-ETV Bharat Tamil Nadu)

மதுரை: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அரங்கநாதன். இவர் தமிழ்நாடு அரசின் தமிழ் வழியில் அர்ச்சராக பயின்று தற்போது திருவண்ணாமலை கோயில் அர்ச்சராக நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கரூர் மாவட்டம் நேரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் உண்ட இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க கோரி மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில், அவ்வாறு அங்கப் பிரதட்சணமும் செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதுபோல பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதனால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடி பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றுவிட்டனர். இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். ஏற்கனவே, அரசுத் தரப்பில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேலும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 41வது முறையாக நீட்டிப்பு!

மதுரை: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அரங்கநாதன். இவர் தமிழ்நாடு அரசின் தமிழ் வழியில் அர்ச்சராக பயின்று தற்போது திருவண்ணாமலை கோயில் அர்ச்சராக நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கரூர் மாவட்டம் நேரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் உண்ட இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க கோரி மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில், அவ்வாறு அங்கப் பிரதட்சணமும் செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதுபோல பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதனால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடி பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றுவிட்டனர். இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். ஏற்கனவே, அரசுத் தரப்பில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேலும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 41வது முறையாக நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.