ETV Bharat / state

யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம்; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - Elephant corridor issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 7:16 PM IST

Elephant Corridor: கோவையில் யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் ஜூலை 5 வரை தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Elephants
யானைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழகத்தில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேணடும் எனவும், கோவை சாடிவயல் பகுதியில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கவும், தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசுத் தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 5 வரை தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானப் பணிகளை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், கல்லார் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான தோட்டத்தை அகற்ற உத்தரவிட்டு மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தோட்டக்கலைத் துறைச் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் எச்சரித்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை.. பதைபதைக்கும் வீடியோ காட்சி!

சென்னை: தமிழகத்தில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேணடும் எனவும், கோவை சாடிவயல் பகுதியில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கவும், தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசுத் தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 5 வரை தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானப் பணிகளை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், கல்லார் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான தோட்டத்தை அகற்ற உத்தரவிட்டு மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தோட்டக்கலைத் துறைச் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் எச்சரித்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை.. பதைபதைக்கும் வீடியோ காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.