ETV Bharat / state

மற்ற இழப்பீட்டை ஒப்பிடுகையில் பேனர் விழுந்து சிறுவன் பலியானதில் இழப்பீடு போதுமா? மீண்டும் நீதிமன்றம் கேள்வி! - Banner issue in TN

Madras High Court: விழுப்புரத்தில் விதிகளை பின்பற்றாமல் கட்சி கொடிக் கம்பம் வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு அரசு கொடுத்த இழப்பீடு போதுமா என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியதுடன், வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 10:44 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று திமுகவினர் பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது, 13 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்ட விரோதமாக பேனர்கள், ப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் கட்சி சார்பில் வழங்கியுள்ளதாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கபட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், குற்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோத பேனர் உள்ளிட்டவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற நிகழ்வுகளில் மரணமடைந்த நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுத் தொகையை ஒப்பிடுகையில் இந்த நிதி போதுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், பேனர்கள் தொடர்பான விதிகளை முறைப்படுத்துவது மற்றும் அமல்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத உள்ஒதுக்கீடு; அரசாணை 151-ஐ ரத்து செய்ய வலியுறுத்தல்! - GO Number 151

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று திமுகவினர் பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது, 13 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்ட விரோதமாக பேனர்கள், ப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் கட்சி சார்பில் வழங்கியுள்ளதாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கபட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், குற்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோத பேனர் உள்ளிட்டவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற நிகழ்வுகளில் மரணமடைந்த நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுத் தொகையை ஒப்பிடுகையில் இந்த நிதி போதுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், பேனர்கள் தொடர்பான விதிகளை முறைப்படுத்துவது மற்றும் அமல்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத உள்ஒதுக்கீடு; அரசாணை 151-ஐ ரத்து செய்ய வலியுறுத்தல்! - GO Number 151

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.