ETV Bharat / state

பொத்தூரில் அடக்கம் செய்யப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்; உயர் நீதிமன்றம் அனுமதி! - ARMSTRONG BODY BURIAL TIRUVALLUR

Armstrong Body: சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 2:59 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஆம்ஸ்ட்ராங்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu and BSP TN Unit FB Page)

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (ஜூலை 5) படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க கோரி அவரது மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் பலத்த ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.16 அடி சாலை உள்ள பகுதியில் கட்சி அலுவலகம் அமைந்துள்ளதாலும், அது குடியிருப்புப் பகுதி என்பதாலும் அவரது உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் எதிர்வாதம் எடுத்து வைக்கப்பட்டது. அவசரமாக விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று பிற்பகல் 2:15 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உறவினருக்கு சொந்தமான நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான அனுமதி அளித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறி அவற்றின் நகல்களை தாக்கல் செய்தார்.

இதை பொற்கொடி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, தேவையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கட்சி அலுவலகத்தில் அவர் நினைவாக நினைவிடம் கட்டுவது அல்லது மருத்துவமனைகள் கட்டுவதற்கு அரசின் அனுமதிகளை பெற்று நடவடிக்கைகளை எடுக்கலாம் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதால் அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தனக்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, அந்த விண்ணப்பத்தின் மீது அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலத்தை அமைதியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங்கின் தூரத்து உறவினரான சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த காஞ்சனா தேவி என்பவருக்கு சொந்தமாக. திருவள்ளூர் மாவட்டம், பொத்தூருக்கு உட்பட்ட கன்னடபாளையம், ரோஜா நகரில் 9,461 சதுர அடி பட்டா நிலம் ( சர்வே எண் 160) உள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் உடலை அங்கு அடக்கம் செய்ய அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க விவகாரம்: விஜயகாந்த் விஷயத்தில் எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (ஜூலை 5) படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க கோரி அவரது மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் பலத்த ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.16 அடி சாலை உள்ள பகுதியில் கட்சி அலுவலகம் அமைந்துள்ளதாலும், அது குடியிருப்புப் பகுதி என்பதாலும் அவரது உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் எதிர்வாதம் எடுத்து வைக்கப்பட்டது. அவசரமாக விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று பிற்பகல் 2:15 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உறவினருக்கு சொந்தமான நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான அனுமதி அளித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறி அவற்றின் நகல்களை தாக்கல் செய்தார்.

இதை பொற்கொடி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, தேவையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கட்சி அலுவலகத்தில் அவர் நினைவாக நினைவிடம் கட்டுவது அல்லது மருத்துவமனைகள் கட்டுவதற்கு அரசின் அனுமதிகளை பெற்று நடவடிக்கைகளை எடுக்கலாம் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதால் அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தனக்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, அந்த விண்ணப்பத்தின் மீது அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலத்தை அமைதியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங்கின் தூரத்து உறவினரான சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த காஞ்சனா தேவி என்பவருக்கு சொந்தமாக. திருவள்ளூர் மாவட்டம், பொத்தூருக்கு உட்பட்ட கன்னடபாளையம், ரோஜா நகரில் 9,461 சதுர அடி பட்டா நிலம் ( சர்வே எண் 160) உள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் உடலை அங்கு அடக்கம் செய்ய அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க விவகாரம்: விஜயகாந்த் விஷயத்தில் எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.