ETV Bharat / state

பாஜக சின்னமாக தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து வழக்கு; தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 5:48 PM IST

BJP Lotus Symbol: தேசிய மலரான தாமரையை பாஜக கட்சி சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

பாஜக சின்னமாக தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து வழக்கு
பாஜக சின்னமாக தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து வழக்கு

சென்னை: தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவருமான ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “தாமரை மலர் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன.

மேலும், தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்!

சென்னை: தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவருமான ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “தாமரை மலர் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன.

மேலும், தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.