ETV Bharat / state

அமைச்சர் பொன்முடி வழக்கு; 8 வாரங்களுக்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்! - Minister Ponmudi Asset case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 9:19 PM IST

Ponmudi Asset case: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி
சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 1996 - 2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் பொன்முடி 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து பின்னர் வேலூருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து இன்று அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். அப்போது விசாரணையில் பொன்முடிக்கு எதிரான வழக்கை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை: கடந்த 1996 - 2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் பொன்முடி 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து பின்னர் வேலூருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து இன்று அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். அப்போது விசாரணையில் பொன்முடிக்கு எதிரான வழக்கை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கை: உள் ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.