ETV Bharat / state

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது! - Drug selling student arrested

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 1:23 PM IST

Drug selling student arrested: போலீசார் சோதனையில் மதுரவாயலில் கஞ்சா விற்பனை செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Seized ganja image
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மதுரவாயல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுரவாயல் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கிய போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அவர் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரின் விசாரணையில் கஞ்சா வைத்திருந்த அந்த வாலிபர் ஆவடியை அடுத்த வீராபுரம், நியூ கண்ணியம்மன் நகர் பகுதியை சேர்ந்த 20 வயது நபர் என்பதும், இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வரும் மாணவர் என்பதும் தெரியவந்தது.

இவர் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 1/4 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் மாயமான 2 வயது குழந்தை.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார் - நடந்தது என்ன? - Child Kidnap In Chennai Central

சென்னை: மதுரவாயல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுரவாயல் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கிய போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அவர் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரின் விசாரணையில் கஞ்சா வைத்திருந்த அந்த வாலிபர் ஆவடியை அடுத்த வீராபுரம், நியூ கண்ணியம்மன் நகர் பகுதியை சேர்ந்த 20 வயது நபர் என்பதும், இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வரும் மாணவர் என்பதும் தெரியவந்தது.

இவர் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 1/4 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் மாயமான 2 வயது குழந்தை.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார் - நடந்தது என்ன? - Child Kidnap In Chennai Central

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.