ETV Bharat / state

கியூஆர் கோடு உடன் 2025 காலண்டர்கள்.. ஆடிப்பெருக்கை ஒட்டி சிவகாசி அச்சகங்கள் அசத்தல்! - new year calendar launch

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 10:41 AM IST

2025 New year calendar launch: சிவகாசியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 2025ஆம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பங்கள் பூஜையுடன் வெளியிடப்பட்டது.

காலண்டர் தயாரிப்பு
காலண்டர் தயாரிப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: சிவகாசியின் முதன்மையான தொழில்களில் பட்டாசு உற்பத்திக்கு அடுத்தபடியாக அச்சகங்கள் இருந்து வருகிறது. இங்குள்ள அச்சகங்களில், 50க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளில் மட்டும் பிரத்யேகமாக ஈடுபட்டு வருகின்றன. சிவகாசி அச்சகங்களில் வழக்கமான தினசரி காலண்டர்களுடன், பல வடிவங்களில் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

டை கட்டிங் காலண்டர், பாயில்ஸ் காலண்டர், சில்வர் கோட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், யூவி காலண்டர், கையடக்க காலண்டர் முதல் மெகா அளவிலான காலண்டர்கள் வரை அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், கடிகாரத்துடன் இணைந்த தினசரி காலண்டர், பல வடிவங்களில் சுவாமி படங்களுடன் அழகிய போட்டோ பிரேம்களுடன் கூடிய காலண்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடவுள்கள், தமிழக அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், இயற்கை காட்சிகள், தமிழகத்தின் பிரபலமான இடங்கள், இந்தியாவின் முக்கிய இடங்கள், உலக நாடுகளில் பிரபலமான இடங்கள் என கண்கவரும் வகையில் அச்சிடப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்களிலான காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் புது ரகம் மற்றும் புது வடிவங்களில் காலண்டர்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். ஒரு காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட வடிவங்கள் மற்றும் டிசைன்களில் காலண்டர்கள் தயாராகும். இந்நிலையில், தற்போது வரும் 2025ம் ஆண்டிற்கான காலண்டர்களின் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், 'ஆடிப்பெருக்கு' நாளன்று காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புத்தாண்டிற்கான காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்படும்.

தயாராகியுள்ள காலண்டர் ஆல்பங்கள், காலண்டர்கள் ஆர்டர்கள் எடுக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆல்பங்களில் இருக்கும் மாதிரிகளை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து, அவர்கள் விரும்பும் ரக காலண்டர்களை ஆர்டர்கள் பெற்று, காலண்டர் நிறுவனத்திற்கு முகவர்கள் தருவார்கள். முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் ரக காலண்டர்களை தயார் செய்து அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடும்.

ஆடிப்பெருக்கு நாளிலிருந்தே வரும் புத்தாண்டிற்கான காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கிவிடும். ஆடிப்பெருக்கு நாளில் புத்தாண்டு காலண்டர் சீசன் தொடங்கினாலும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தான் காலண்டர் சீசன் உச்சகட்ட விறுவிறுப்பில் இருக்கும். தற்போது, முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான காலண்டர் ஆல்பங்கள் 'ஆடிப்பெருக்கு' நாளில் வெளியிடப்பட்டன.

இது குறித்து கற்பகா காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஜெய்சங்கர் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் தினசரி காலண்டர்களில் புதுப்புது ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், வரும் 2025 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மெகா அளவிலான 'மரகத காலம்' காலண்டரும், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் புதுமையான வகையிலான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு நாளும், அன்றைய காலண்டர் தாளில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால், அந்த சட்டமன்றத் தொகுதியின் சிறப்பம்சங்கள், கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இவற்றுடன் கடிகாரத்துடன் கூடிய மெகா சைஸ் காலண்டர் உட்பட பல ரகங்களிலான வழக்கமான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்தாண்டை விட இந்த ஆண்டு 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆடி அமாவாசை; தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!

விருதுநகர்: சிவகாசியின் முதன்மையான தொழில்களில் பட்டாசு உற்பத்திக்கு அடுத்தபடியாக அச்சகங்கள் இருந்து வருகிறது. இங்குள்ள அச்சகங்களில், 50க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளில் மட்டும் பிரத்யேகமாக ஈடுபட்டு வருகின்றன. சிவகாசி அச்சகங்களில் வழக்கமான தினசரி காலண்டர்களுடன், பல வடிவங்களில் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

டை கட்டிங் காலண்டர், பாயில்ஸ் காலண்டர், சில்வர் கோட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், யூவி காலண்டர், கையடக்க காலண்டர் முதல் மெகா அளவிலான காலண்டர்கள் வரை அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், கடிகாரத்துடன் இணைந்த தினசரி காலண்டர், பல வடிவங்களில் சுவாமி படங்களுடன் அழகிய போட்டோ பிரேம்களுடன் கூடிய காலண்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடவுள்கள், தமிழக அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், இயற்கை காட்சிகள், தமிழகத்தின் பிரபலமான இடங்கள், இந்தியாவின் முக்கிய இடங்கள், உலக நாடுகளில் பிரபலமான இடங்கள் என கண்கவரும் வகையில் அச்சிடப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்களிலான காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் புது ரகம் மற்றும் புது வடிவங்களில் காலண்டர்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். ஒரு காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட வடிவங்கள் மற்றும் டிசைன்களில் காலண்டர்கள் தயாராகும். இந்நிலையில், தற்போது வரும் 2025ம் ஆண்டிற்கான காலண்டர்களின் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், 'ஆடிப்பெருக்கு' நாளன்று காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புத்தாண்டிற்கான காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்படும்.

தயாராகியுள்ள காலண்டர் ஆல்பங்கள், காலண்டர்கள் ஆர்டர்கள் எடுக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆல்பங்களில் இருக்கும் மாதிரிகளை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து, அவர்கள் விரும்பும் ரக காலண்டர்களை ஆர்டர்கள் பெற்று, காலண்டர் நிறுவனத்திற்கு முகவர்கள் தருவார்கள். முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் ரக காலண்டர்களை தயார் செய்து அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடும்.

ஆடிப்பெருக்கு நாளிலிருந்தே வரும் புத்தாண்டிற்கான காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கிவிடும். ஆடிப்பெருக்கு நாளில் புத்தாண்டு காலண்டர் சீசன் தொடங்கினாலும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தான் காலண்டர் சீசன் உச்சகட்ட விறுவிறுப்பில் இருக்கும். தற்போது, முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான காலண்டர் ஆல்பங்கள் 'ஆடிப்பெருக்கு' நாளில் வெளியிடப்பட்டன.

இது குறித்து கற்பகா காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஜெய்சங்கர் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் தினசரி காலண்டர்களில் புதுப்புது ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், வரும் 2025 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மெகா அளவிலான 'மரகத காலம்' காலண்டரும், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் புதுமையான வகையிலான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு நாளும், அன்றைய காலண்டர் தாளில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால், அந்த சட்டமன்றத் தொகுதியின் சிறப்பம்சங்கள், கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இவற்றுடன் கடிகாரத்துடன் கூடிய மெகா சைஸ் காலண்டர் உட்பட பல ரகங்களிலான வழக்கமான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்தாண்டை விட இந்த ஆண்டு 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆடி அமாவாசை; தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.