ETV Bharat / state

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: நிலம் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை எப்போது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 11:38 AM IST

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அதற்காக நிலம் வழங்கும் நில உரிமையாளர்களுக்கு தமிழக தொல்லியல் துறை தரப்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை எதிர்பார்த்து நில உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் வழங்குவோருக்கு இழப்பீட்டுத் தொகை எப்போது
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் வழங்குவோருக்கு இழப்பீட்டுத் தொகை எப்போது

கொந்தகை அகழாய்வு தளம்

சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை 9 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்டங்களை இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட நிலையில், 4ஆம் கட்டத்திலிருந்து இப்பகுதியில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள், சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், சூதுபவள மணிகள், உறைகிணறுகள், தங்கத்தாலான காதணிகள் உட்பட கொந்தகை அகழாய்வுகளில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் உலகத் தொல்லியல் வரலாற்றில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் முயற்சி காரணமாக கீழடியிலேயே கள அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அகழாய்வு செய்யப்பட்டு வரும் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கியுள்ளது. சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் கீழடியின் தொன்மைத் தடங்கள் இருக்கலாம் என மத்திய தொல்லியல் துறை மதிப்பிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கு சுமார் 20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வாய்ப்புள்ளது எனத் தமிழ்நாடு தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நில அளவைப் பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, அந்தந்த நிலச் சொந்தக்காரர்களிடம் பேசி, அதற்குரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. கீழடியைச் சேர்ந்த சோணை, திலீப், கிருஷ்ணன், கஜேந்திரன், நீதிதேவி, மாரியம்மாள், வீரணன் உள்ளிட்ட 17 பேரின் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை, நிலத்திற்கு மட்டுமின்றி, வெட்டப்படும் மரங்களால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டையும் கணக்கில் கொண்டு இத்தொகை வழங்கப்படவுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறும் என சட்டசபையில் அறிவித்துள்ளார். அப்பணிகளோடு திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கான பணிகளும் மேற்கொள்ளப்படலாம் என தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக நில உரிமையாளர்களின் முழு ஒப்புதலுடன் தான் இப்பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்பதோடு, நிலத்திற்குரிய தொகை மட்டுமன்றி, நிலத்திலிருந்து அவர்களுக்கான வருமான இழப்பீடும் சேர்த்துக் கணக்கிட்டு வழங்கப்படும் என தொல்லியல் துறை உறுதியளித்துள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கு; சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு!

கொந்தகை அகழாய்வு தளம்

சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை 9 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்டங்களை இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட நிலையில், 4ஆம் கட்டத்திலிருந்து இப்பகுதியில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள், சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், சூதுபவள மணிகள், உறைகிணறுகள், தங்கத்தாலான காதணிகள் உட்பட கொந்தகை அகழாய்வுகளில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் உலகத் தொல்லியல் வரலாற்றில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் முயற்சி காரணமாக கீழடியிலேயே கள அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அகழாய்வு செய்யப்பட்டு வரும் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கியுள்ளது. சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் கீழடியின் தொன்மைத் தடங்கள் இருக்கலாம் என மத்திய தொல்லியல் துறை மதிப்பிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கு சுமார் 20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வாய்ப்புள்ளது எனத் தமிழ்நாடு தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நில அளவைப் பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, அந்தந்த நிலச் சொந்தக்காரர்களிடம் பேசி, அதற்குரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. கீழடியைச் சேர்ந்த சோணை, திலீப், கிருஷ்ணன், கஜேந்திரன், நீதிதேவி, மாரியம்மாள், வீரணன் உள்ளிட்ட 17 பேரின் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை, நிலத்திற்கு மட்டுமின்றி, வெட்டப்படும் மரங்களால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டையும் கணக்கில் கொண்டு இத்தொகை வழங்கப்படவுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறும் என சட்டசபையில் அறிவித்துள்ளார். அப்பணிகளோடு திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கான பணிகளும் மேற்கொள்ளப்படலாம் என தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக நில உரிமையாளர்களின் முழு ஒப்புதலுடன் தான் இப்பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்பதோடு, நிலத்திற்குரிய தொகை மட்டுமன்றி, நிலத்திலிருந்து அவர்களுக்கான வருமான இழப்பீடும் சேர்த்துக் கணக்கிட்டு வழங்கப்படும் என தொல்லியல் துறை உறுதியளித்துள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கு; சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.