ETV Bharat / state

"சிலம்பம் கலையை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும்" - கராத்தே சங்கர் கோரிக்கை! - Karate Shankar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 9:26 PM IST

சிலம்பம் கலையை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தின் பொது செயலாளர் கராத்தே சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

சிலம்பம் போட்டி
சிலம்பம் போட்டி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: சிலம்பம் என்பது ஒரு தற்காப்பு கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாகும். முந்தைய காலத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டம் போட்டியில் விளையாடுவார்கள். இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சிலம்பாட்டத்தை கற்று விளையாடி வருகின்றனர்.

திருச்சியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி (Video Credit - ETV Bharat Tamilnadu)

இந்நிலையில், சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில், சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு கூட்ட அரங்கில், சிலம்பம் உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த சிலம்ப போட்டியில் ஒற்றைக் கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள்வீச்சு, சிலம்பம் சண்டை, அலங்கார வரிசை மான் கொம்பு, வேல் கம்பு, சுருள்வாள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, துபாய் ,சிங்கப்பூர், ஸ்ரீலங்கா,கத்தார் ,போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலம்ப வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிலம்பம் உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “சிலம்ப போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சிலம்ப உலக சம்மேளனத்தால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும் அதற்கான வெற்றி கோப்பைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், அயல்நாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழக அரசால் விளையாட்டு துறையில் ஒதுக்கப்பட்டிருக்கும் அரசு வேலையில் சிலம்ப வீரர்கள் இடம் பெற வேண்டும். நமது பாரம்பரிய கலையான சிலம்ப கலையை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என மத்திய, மாநில அரசுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “ஏன் மோதுற மாதிரி வந்தீங்க?”.. கண்மூடித்தனமாக அடித்த போதை கும்பல்.. திருவாரூரில் பரபரப்பு!

திருச்சி: சிலம்பம் என்பது ஒரு தற்காப்பு கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாகும். முந்தைய காலத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டம் போட்டியில் விளையாடுவார்கள். இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சிலம்பாட்டத்தை கற்று விளையாடி வருகின்றனர்.

திருச்சியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி (Video Credit - ETV Bharat Tamilnadu)

இந்நிலையில், சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில், சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு கூட்ட அரங்கில், சிலம்பம் உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த சிலம்ப போட்டியில் ஒற்றைக் கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள்வீச்சு, சிலம்பம் சண்டை, அலங்கார வரிசை மான் கொம்பு, வேல் கம்பு, சுருள்வாள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, துபாய் ,சிங்கப்பூர், ஸ்ரீலங்கா,கத்தார் ,போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலம்ப வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிலம்பம் உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “சிலம்ப போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சிலம்ப உலக சம்மேளனத்தால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும் அதற்கான வெற்றி கோப்பைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், அயல்நாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழக அரசால் விளையாட்டு துறையில் ஒதுக்கப்பட்டிருக்கும் அரசு வேலையில் சிலம்ப வீரர்கள் இடம் பெற வேண்டும். நமது பாரம்பரிய கலையான சிலம்ப கலையை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என மத்திய, மாநில அரசுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “ஏன் மோதுற மாதிரி வந்தீங்க?”.. கண்மூடித்தனமாக அடித்த போதை கும்பல்.. திருவாரூரில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.