ETV Bharat / state

கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி; கலெக்டர்கள், எஸ்பிகளுக்கு முதலமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு - Kallakurichi illicit Liquor Deaths

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 7:45 AM IST

MK Stalin on Kallakurichi illicit Liquor Death Case: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்தும், தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரம் குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கை, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 18 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்து பலருக்கு வயிற்று வலி, கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 115 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த வழக்கை, சிபிசிஐடி வசம், தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க: "முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் பதவி விலக வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி காட்டம் - kallakurichi illicit liquor death

அதேபோல், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தீவிர ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளார். கள்ளச்சாராய விற்பனை புகாரில், 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக கள்ளச்சாரயத் தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை முதன்மை செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சித்துறை செந்தில் குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் தலைமை செயலகத்திலும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: திமுக, அதிமுகவை மறைமுகமாக சாடியுள்ள நடிகர் சூர்யா! - kallakurichi illicit liquor issue

இக்கூட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விவகாரம்: "சிகிச்சைக்கு வர தயங்கியதால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - kallakurichi illicit liquor issue

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரம் குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கை, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 18 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்து பலருக்கு வயிற்று வலி, கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 115 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த வழக்கை, சிபிசிஐடி வசம், தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க: "முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் பதவி விலக வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி காட்டம் - kallakurichi illicit liquor death

அதேபோல், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தீவிர ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளார். கள்ளச்சாராய விற்பனை புகாரில், 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக கள்ளச்சாரயத் தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை முதன்மை செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சித்துறை செந்தில் குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் தலைமை செயலகத்திலும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: திமுக, அதிமுகவை மறைமுகமாக சாடியுள்ள நடிகர் சூர்யா! - kallakurichi illicit liquor issue

இக்கூட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விவகாரம்: "சிகிச்சைக்கு வர தயங்கியதால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - kallakurichi illicit liquor issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.