ETV Bharat / state

252 அரசுப் பள்ளிகளில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி.. சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்! - Electronic Training in Govt Schools

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 4:26 PM IST

Electronic Training in Govt Schools: சென்னை ஐஐடியின் மூலம் 252 அரசுப் பள்ளிகளில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி வழங்கும் திட்டம் ஆகஸ்ட் முதல் துவக்கப்படும் என்று ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று, பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில், “12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கிறது. அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நம் தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவர் எம்ஐடியில் படித்து நாட்டின் மிஷன் மேன் ஆனவர் அப்துல் கலாம். அதேபோல், அரசுப் பள்ளியில் படித்து தற்போது சென்னை ஐஐடியின் ஏரோபேஸ் இன்ஜினியரிங் படிக்கப்போகும் பார்த்த சாரதி இந்த நூற்றாண்டின் அப்துல் கலாமாக வருவார். பிஎஸ் டேட்டா சயின்ஸ் (B.S.Data Science) பாடத்தில் 2021-ல் 27 மாணவர்கள் இருந்தனர். 2022ல் 115 ஆக உயர்ந்தது. 2023ல் 147 அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் படிக்கின்றனர். ஆயிரம் மாணவர்கள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிக்க வேண்டும் என்பது கனவு.

கல்வியில் 2 துறைகள், முக்கியமாக நாட்டிற்கும் தேவையாக உள்ளது. டேட்டா சயின்ஸ் (Data Science), ஏஐ (AI), அடுத்ததாக எலக்ட்ரானிக்ஸ் (Electronics) பாடப்பிரிவும் முக்கியமாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாட்டிற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது. அதற்கு தேவையான மனித வளத்தையும், வேலைத்திறன் பெற்றவர்களையும் உருவாக்கவும் தமிழ்நாடு அரசும், சென்னை ஐஐடியும் உறுதுணையாக இருக்கும்.

அரசுப் பள்ளிகளில் லக்ட்ரானிக்ஸ் பயிற்சி: 252 அரசுப் பள்ளியில் எலக்ட்ரானிக் கிட் (Electronic kit) வழங்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பள்ளிக்கு தலா 2 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 9, 10, 11, 12ஆம் வகுப்பில் 100 மாணவர்கள் என 400 மாணவர்கள் பயிற்சி பெற உள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் எலக்ட்ரானிக் பயில்கின்றனர்.

அதில் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் 25 ஆயிரம். அவர்களில், 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஆர்வம் வந்தால், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் திட்டத்தில் பெரிய பலன் வரும். இந்த வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முதல் துவக்கப்படும். நான் முதல்வன் திட்டத்துடன் சென்னை ஐஐடியும் இணைந்து செயல்படுகிறோம். கடந்த மாதம் 9 ஆயிரம் மாணவர்களுக்கு சாப்ட்வேர் (Software) பயிற்சி அளித்துள்ளோம். 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செம்பியம் பெண் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் மரணம்.. திடீரென எடுத்த வாந்தி.. போலீஸ் தீவிர விசாரணை..! - woman ssi dies of heart attack

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று, பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில், “12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கிறது. அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நம் தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவர் எம்ஐடியில் படித்து நாட்டின் மிஷன் மேன் ஆனவர் அப்துல் கலாம். அதேபோல், அரசுப் பள்ளியில் படித்து தற்போது சென்னை ஐஐடியின் ஏரோபேஸ் இன்ஜினியரிங் படிக்கப்போகும் பார்த்த சாரதி இந்த நூற்றாண்டின் அப்துல் கலாமாக வருவார். பிஎஸ் டேட்டா சயின்ஸ் (B.S.Data Science) பாடத்தில் 2021-ல் 27 மாணவர்கள் இருந்தனர். 2022ல் 115 ஆக உயர்ந்தது. 2023ல் 147 அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் படிக்கின்றனர். ஆயிரம் மாணவர்கள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிக்க வேண்டும் என்பது கனவு.

கல்வியில் 2 துறைகள், முக்கியமாக நாட்டிற்கும் தேவையாக உள்ளது. டேட்டா சயின்ஸ் (Data Science), ஏஐ (AI), அடுத்ததாக எலக்ட்ரானிக்ஸ் (Electronics) பாடப்பிரிவும் முக்கியமாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாட்டிற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது. அதற்கு தேவையான மனித வளத்தையும், வேலைத்திறன் பெற்றவர்களையும் உருவாக்கவும் தமிழ்நாடு அரசும், சென்னை ஐஐடியும் உறுதுணையாக இருக்கும்.

அரசுப் பள்ளிகளில் லக்ட்ரானிக்ஸ் பயிற்சி: 252 அரசுப் பள்ளியில் எலக்ட்ரானிக் கிட் (Electronic kit) வழங்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பள்ளிக்கு தலா 2 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 9, 10, 11, 12ஆம் வகுப்பில் 100 மாணவர்கள் என 400 மாணவர்கள் பயிற்சி பெற உள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் எலக்ட்ரானிக் பயில்கின்றனர்.

அதில் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் 25 ஆயிரம். அவர்களில், 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஆர்வம் வந்தால், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் திட்டத்தில் பெரிய பலன் வரும். இந்த வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முதல் துவக்கப்படும். நான் முதல்வன் திட்டத்துடன் சென்னை ஐஐடியும் இணைந்து செயல்படுகிறோம். கடந்த மாதம் 9 ஆயிரம் மாணவர்களுக்கு சாப்ட்வேர் (Software) பயிற்சி அளித்துள்ளோம். 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செம்பியம் பெண் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் மரணம்.. திடீரென எடுத்த வாந்தி.. போலீஸ் தீவிர விசாரணை..! - woman ssi dies of heart attack

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.