ETV Bharat / state

12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு; 12,696 மாணவர்கள் ஆப்செண்ட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 7:14 PM IST

12th english exam absentees: இன்று 12aaம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத் தேர்வு நடைபெற்ற நிலையில், அதில் 12 ஆயிரத்து 696 மாணவர்கள் தேர்வெழுத வராததாக அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு ஆங்கிலத் தேர்விற்கு 12 ஆயிரத்து 696 மாணவர்கள் வரவில்லை
12ம் வகுப்பு ஆங்கிலத் தேர்விற்கு 12 ஆயிரத்து 696 மாணவர்கள் வரவில்லை

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கு 3,302 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இத்தேர்விற்கு 7 லட்சத்து 72 ஆயிரத்து 363 பள்ளி மாணவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 191 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரத்து 554 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 ஆயிரத்து 820 பள்ளி மாணவர்கள் மற்றும் 876 தனித்தேர்வர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 696 பேர் இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வினை எழுத வரவில்லை என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வின்போது முறைகேட்டில் ஈடுப்பட்டதாக 3 மாணவர்கள் பிடிப்பட்டுள்ளதாகவும், அரசுத் தேர்வுத்துறை தெரிவித்தது. இந்நிலையில், ஆங்கிலத் தேர்விற்கான வினாத்தாள் எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவ மாணவர் மீது தாக்குதல்; வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது என்ன?

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கு 3,302 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இத்தேர்விற்கு 7 லட்சத்து 72 ஆயிரத்து 363 பள்ளி மாணவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 191 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரத்து 554 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 ஆயிரத்து 820 பள்ளி மாணவர்கள் மற்றும் 876 தனித்தேர்வர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 696 பேர் இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வினை எழுத வரவில்லை என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வின்போது முறைகேட்டில் ஈடுப்பட்டதாக 3 மாணவர்கள் பிடிப்பட்டுள்ளதாகவும், அரசுத் தேர்வுத்துறை தெரிவித்தது. இந்நிலையில், ஆங்கிலத் தேர்விற்கான வினாத்தாள் எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவ மாணவர் மீது தாக்குதல்; வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.