ETV Bharat / state

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக சரிவு - Water flow in Cauvery

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 1:01 PM IST

Water flow in hogenakkal Cauvery river: கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 1.50 லட்சமாக சரிந்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆறு
ஒகேனக்கல் காவிரி ஆறு (Credits - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: கர்நாடக - கேரள மாநிலங்களில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் முழுவதும் நிரம்பியது. இதனால் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்பட்டன. காவிரியில் நேற்று(வியாழக்கிழமை) தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு விநாடிக்கு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்தது.

இதன் காரணமாக ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள வீடுகள் வரை தண்ணீர் அதிகரித்தது. மேலும், ஒகேனக்கல் பகுதியில் பல இடங்களில் தண்ணீர் வீடுகளை தொட்டுச் சென்றது. இந்நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து குறைய தொடங்கியதால், நீர்வரத்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

காலை 10 மணி நிலவரப்படி நீர்வரத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து சரிந்துள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை: சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் 18-ஆவது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அடுத்த ஸ்டெப் ஐஏஎஸ் தான்.. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதியிடம் பழங்குடியின் மாணவி விருப்பம்! - TRIBAL GIRL ROHINI

தருமபுரி: கர்நாடக - கேரள மாநிலங்களில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் முழுவதும் நிரம்பியது. இதனால் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்பட்டன. காவிரியில் நேற்று(வியாழக்கிழமை) தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு விநாடிக்கு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்தது.

இதன் காரணமாக ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள வீடுகள் வரை தண்ணீர் அதிகரித்தது. மேலும், ஒகேனக்கல் பகுதியில் பல இடங்களில் தண்ணீர் வீடுகளை தொட்டுச் சென்றது. இந்நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து குறைய தொடங்கியதால், நீர்வரத்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

காலை 10 மணி நிலவரப்படி நீர்வரத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து சரிந்துள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை: சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் 18-ஆவது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அடுத்த ஸ்டெப் ஐஏஎஸ் தான்.. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதியிடம் பழங்குடியின் மாணவி விருப்பம்! - TRIBAL GIRL ROHINI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.