ETV Bharat / state

காதலிக்க மறுத்த சிறுமிக்கு அரிவாள் வெட்டு... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..! - Love couple brutally attacked

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 10:09 PM IST

Love couple brutally attacked in chennai: சென்னையில் காதலிக்க மறுத்த சிறுமி மற்றும் அவரது காதலன் என இருவரையும் கொடூரமாக வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடுரமாக தாக்கப்பட்ட இளைஞர்
கொடுரமாக தாக்கப்பட்ட இளைஞர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல்(20). பரங்கிமலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரவேல் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் பெரியமேடு கஜபதி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெரியமேடு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அப்பாஸ் என்பவர், இஸ்ரவேல் மற்றும் அந்த சிறுமியை வழிமறித்து, சிறுமியின் முடியை பிடித்து இழுத்து அடித்து, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரியவருகிறது. மேலும், இதனால் இஸ்ரவேல் மற்றும் அப்பாஸ் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நேற்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்த இஸ்ரவேல் மற்றும் அவரது காதலியை அப்பாஸ் கத்தியால் வெட்டியதாக தெரிகிறது.

இதையும் படிங்க: விருந்துல ஏன் முட்டை வைக்கல? - தகராறில் அண்ணன் மகனுக்கு வெட்டு... தூத்துக்குடியில் நடந்த பயங்கரம்!

இதில் இஸ்ரவேல் மற்றும் சிறுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், டிபி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, இச்சம்பவம் தொடர்பாக படுகாயம் அடைந்த இஸ்ரவேலின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்பாஸ், ஜன்னத், சதீஷ்குமார் மற்றும் வசந்த் என நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தாக்கப்பட்ட அந்த சிறுமி ஜாபர்கான்பேட்டையில் போதை மருந்து விற்பனை செய்து வருவதாகவும், அந்த சிறுமியை இஸ்ரவேல் காதலித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சிறுமியை கைது செய்யப்பட்ட அப்பாஸ் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததும், ஆனால் சிறுமி இஸ்ரவேலை காதலித்து வந்ததால் ஆத்திரத்தில் இருவரையும் தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: உச்சகட்ட டென்க்ஷன்.. நடந்தே செல்லும் டிஐஜி, எஸ்பி.. உற்றுநோக்கும் டிஜிபி.. நெல்லை ரிப்போர்ட்..!

சென்னை: சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல்(20). பரங்கிமலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரவேல் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் பெரியமேடு கஜபதி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெரியமேடு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அப்பாஸ் என்பவர், இஸ்ரவேல் மற்றும் அந்த சிறுமியை வழிமறித்து, சிறுமியின் முடியை பிடித்து இழுத்து அடித்து, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரியவருகிறது. மேலும், இதனால் இஸ்ரவேல் மற்றும் அப்பாஸ் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நேற்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்த இஸ்ரவேல் மற்றும் அவரது காதலியை அப்பாஸ் கத்தியால் வெட்டியதாக தெரிகிறது.

இதையும் படிங்க: விருந்துல ஏன் முட்டை வைக்கல? - தகராறில் அண்ணன் மகனுக்கு வெட்டு... தூத்துக்குடியில் நடந்த பயங்கரம்!

இதில் இஸ்ரவேல் மற்றும் சிறுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், டிபி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, இச்சம்பவம் தொடர்பாக படுகாயம் அடைந்த இஸ்ரவேலின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்பாஸ், ஜன்னத், சதீஷ்குமார் மற்றும் வசந்த் என நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தாக்கப்பட்ட அந்த சிறுமி ஜாபர்கான்பேட்டையில் போதை மருந்து விற்பனை செய்து வருவதாகவும், அந்த சிறுமியை இஸ்ரவேல் காதலித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சிறுமியை கைது செய்யப்பட்ட அப்பாஸ் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததும், ஆனால் சிறுமி இஸ்ரவேலை காதலித்து வந்ததால் ஆத்திரத்தில் இருவரையும் தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: உச்சகட்ட டென்க்ஷன்.. நடந்தே செல்லும் டிஐஜி, எஸ்பி.. உற்றுநோக்கும் டிஜிபி.. நெல்லை ரிப்போர்ட்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.