ETV Bharat / state

கூலிப் விற்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போடக்கூடாது? - நீதிபதி கேள்வி! - high court madurai bench

கூலிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை விசாரணை செய்து வருகிறார். இதில் அதிகமான மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பயன்படுத்தியதாகவும், கூலிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் பதியுப்பட்ட வழக்குகளில், ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த விசாரணையில் நீதிபதி, பள்ளி மாணவர்கள் இந்த கூலிப் குட்கா வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகுந்த வேதனையாக உள்ளது. எனவே, ஏன் கூலிப், குட்கா வகைகளை இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பி இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, “தமிழக அரசு தமிழகத்தில் கூலிப், குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் தடை செய்துள்ளது. ஆனால், அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கொண்டு வருகின்றனர்.

இவை கடுமையான நடவடிக்கையின் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதனை மீறி விற்பனை செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பலர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். மேலும், நமது அருகாமை மாநிலங்களின் அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி அருகே குட்கா, கூலிப் விற்பனை விவகாரம்: நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

அதில் குட்கா பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கடிதம் அனுப்பி உள்ளது” என வாதிட்டார்.

இதனையடுத்து, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கூலிப், குட்கா வகை பொருட்கள் வேறு மாநிலங்களில் தான் அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் எந்த தயாரிப்புக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும், இவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, “ தற்போது கூலிப், குட்கா, புகையிலை பொருள்களை வாலிபர்கள், இளைஞர்களை தாண்டி பள்ளி மாணவர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பல பள்ளி மாணவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு வாய் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது எவ்வாறு குண்டர் சட்டம் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்களோ, அதே போல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை முற்றிலும் தடை செய்ய முடியும்.

எனவே, இந்த நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் போன்ற பொருட்களை தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளை உத்தரவுகளாக பிறப்பிக்க உள்ளது” எனக் கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்தார்.

மதுரை: நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை விசாரணை செய்து வருகிறார். இதில் அதிகமான மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பயன்படுத்தியதாகவும், கூலிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் பதியுப்பட்ட வழக்குகளில், ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த விசாரணையில் நீதிபதி, பள்ளி மாணவர்கள் இந்த கூலிப் குட்கா வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகுந்த வேதனையாக உள்ளது. எனவே, ஏன் கூலிப், குட்கா வகைகளை இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பி இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, “தமிழக அரசு தமிழகத்தில் கூலிப், குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் தடை செய்துள்ளது. ஆனால், அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கொண்டு வருகின்றனர்.

இவை கடுமையான நடவடிக்கையின் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதனை மீறி விற்பனை செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பலர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். மேலும், நமது அருகாமை மாநிலங்களின் அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி அருகே குட்கா, கூலிப் விற்பனை விவகாரம்: நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

அதில் குட்கா பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கடிதம் அனுப்பி உள்ளது” என வாதிட்டார்.

இதனையடுத்து, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கூலிப், குட்கா வகை பொருட்கள் வேறு மாநிலங்களில் தான் அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் எந்த தயாரிப்புக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும், இவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, “ தற்போது கூலிப், குட்கா, புகையிலை பொருள்களை வாலிபர்கள், இளைஞர்களை தாண்டி பள்ளி மாணவர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பல பள்ளி மாணவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு வாய் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது எவ்வாறு குண்டர் சட்டம் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்களோ, அதே போல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை முற்றிலும் தடை செய்ய முடியும்.

எனவே, இந்த நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் போன்ற பொருட்களை தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளை உத்தரவுகளாக பிறப்பிக்க உள்ளது” எனக் கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.