ETV Bharat / state

மழை எதிரொலி: சென்னை போரூர் மேம்பாலத்தில் 3 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த வாகனங்கள்! - Traffic Jam on Porur Flyover

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 4:13 PM IST

Updated : Aug 5, 2024, 4:36 PM IST

Rainfall In Chennai: மழையின் காரணமாக சென்னை போரூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஆமை போல் நகர்ந்து செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போரூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
போரூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் நேற்று (ஆக.04) மாலை முதல் மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில், மாநகரில் உள்ள மிகவும் பிரதான சாலையான போரூர் மேம்பாலம் சாலை, போக்குவரத்து நெரிசலால் கடும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மழை காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், ஆமை வேகத்தில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து செல்லும் சூழல் உள்ளதனால் இந்த போரூர் மேம்பாலம் மற்றும் போரூர் - குன்றத்தூர் சாலை, பூந்தமல்லி - மவுண்ட் சாலை, போரூர் முதல் வடபழனி வரை செல்லக்கூடிய ஆற்காடு சாலை மற்றும் பூந்தமல்லி வரை செல்லும் சாலை என நான்கு சாலைகளும் தற்போது கடும் போக்குவரத்து நெறிகளுக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துக் காணப்படுகிறது. போரூர் மேம்பால முதல் ராமாபுரம் வழி கிண்டி செல்லக்கூடிய சாலையில் மேம்பாலத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இந்த பகுதிகளில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணி நடந்துவரக்கூடிய ஒரு சூழ்நிலையால் சாலை குறுகலாக உள்ளது இதன் காரணமாகவும் வாகனங்கள் இந்த பகுதியில் எளிதில் கடந்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையின் மிக முக்கிய சாலையாகவும், தினமும் லட்சக் கணக்கில் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய சாலையாகவும் உள்ள இந்த சாலையில் இன்று (ஆக.05) காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை போக்குவரத்து போலீசார் தலையிட்டு போக்குவரத்து நெரிசலை சீர் செய்து மக்கள் எளிதில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சென்னையின் பல முக்கிய சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியிருப்பதால், அப்பகுதி வழியாகச் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ஒருபகுதியாக, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 18 ஆகிய வார்டுகளுக்கு முக்கிய பிரதான சாலையாக உள்ளது நூம்பல் சாலை. இந்த சாலை ஏற்கெனவே குண்டும் குழியுமாய் உள்ள நிலையில், தற்போது மழை நீரும் தேங்கி பாதசாரிகள் கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கூவம் ஆற்றில் கலக்கப்படும் மலக்கழிவுகள் - வீடியோ ஆதாரம் வெளியீடு

சென்னை: சென்னையில் நேற்று (ஆக.04) மாலை முதல் மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில், மாநகரில் உள்ள மிகவும் பிரதான சாலையான போரூர் மேம்பாலம் சாலை, போக்குவரத்து நெரிசலால் கடும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மழை காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், ஆமை வேகத்தில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து செல்லும் சூழல் உள்ளதனால் இந்த போரூர் மேம்பாலம் மற்றும் போரூர் - குன்றத்தூர் சாலை, பூந்தமல்லி - மவுண்ட் சாலை, போரூர் முதல் வடபழனி வரை செல்லக்கூடிய ஆற்காடு சாலை மற்றும் பூந்தமல்லி வரை செல்லும் சாலை என நான்கு சாலைகளும் தற்போது கடும் போக்குவரத்து நெறிகளுக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துக் காணப்படுகிறது. போரூர் மேம்பால முதல் ராமாபுரம் வழி கிண்டி செல்லக்கூடிய சாலையில் மேம்பாலத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இந்த பகுதிகளில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணி நடந்துவரக்கூடிய ஒரு சூழ்நிலையால் சாலை குறுகலாக உள்ளது இதன் காரணமாகவும் வாகனங்கள் இந்த பகுதியில் எளிதில் கடந்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையின் மிக முக்கிய சாலையாகவும், தினமும் லட்சக் கணக்கில் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய சாலையாகவும் உள்ள இந்த சாலையில் இன்று (ஆக.05) காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை போக்குவரத்து போலீசார் தலையிட்டு போக்குவரத்து நெரிசலை சீர் செய்து மக்கள் எளிதில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சென்னையின் பல முக்கிய சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியிருப்பதால், அப்பகுதி வழியாகச் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ஒருபகுதியாக, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 18 ஆகிய வார்டுகளுக்கு முக்கிய பிரதான சாலையாக உள்ளது நூம்பல் சாலை. இந்த சாலை ஏற்கெனவே குண்டும் குழியுமாய் உள்ள நிலையில், தற்போது மழை நீரும் தேங்கி பாதசாரிகள் கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கூவம் ஆற்றில் கலக்கப்படும் மலக்கழிவுகள் - வீடியோ ஆதாரம் வெளியீடு

Last Updated : Aug 5, 2024, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.