ETV Bharat / state

“மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது மோசமாக உள்ளது” - ஆர்.என்.ரவி கருத்து! - RN Ravi on Tamil Nadu syllabus

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 9:22 PM IST

RN Ravi on Tamil Nadu Education Syllabus: பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தைப் பற்றிய கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும், மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது மோசமாக உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என் ரவி
ஆளுநர் ஆர்.என் ரவி (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அளுநர் கூறுகையில், “பெண்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. நமது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும் காலனிய ஆதிக்கம் ஒடுக்கியது.

ஆனால் சத்தியமும், தர்மமும் தான் வென்றது. இந்த நாடு தர்மத்தைக் கொண்டு வளர்ந்தது. ஆரம்பத்தில் இந்தியாவும் பொருளாதாரத்தில் 6வது இடத்தில் இருந்தது. ஆனால், நல்ல வழிகாட்டுதல் இல்லாததால் பொருளாதாரம், கல்வியில் 11வது இடத்திற்கு பின்தங்கினோம். கடைசி 10 வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

உலகமே இந்தியாவின் ஆற்றல் திறனை திரும்பிப் பார்த்து வருகிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் இந்தியாவிடம் ஆலோசனை கேட்கப்படுகிறது. நூறாவது ஆண்டு சுதந்திர தினம் 2047ஆம் ஆண்டில் கொண்டாடும் போது, இந்தியா முழுமையாக வல்லரசு பெற்று விளங்கும். அதற்கு பெண் சக்தியின் பங்களிப்பு மிக அவசியம். ஒவ்வொரு வீட்டிற்கும் பெண்களே முதுகெலும்பாக இருக்கின்றனர். அதேபோல், நாட்டிற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த 25 வருடம் மிகவும் முக்கியமானது. இந்த நாட்டில் மிகப்பெரிய ஆற்றல், மிகப்பெரிய ஆளுமைகள் தேவை. நமது கனவு பெரிதாக இருக்க வேண்டும். பெண்கள் இல்லாத இந்தியா கிடையாது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுடபத்தை அறிமுகப்படுத்த வேண்டும். மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித்தரம் குறைவாக உள்ளது. நான் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றைப் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்குப் பார்வையை வளர்க்க வேண்டும்.

53 கோடி பெண்கள் பிரதம மந்திரியின் ஜன்தன் திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் 1.2 கோடி பேர் முத்ரா கடன் பெற்றிருக்கின்றனர். அடுத்த 20 வருடங்களில் இளைஞர்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருந்து, இந்த நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும். கடுமையாக உழைத்தால் நமது கனவுகளை அடைய முடியும்” என பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இரட்டை பட்டம்.. ஸ்டார்ட் அப் ஐடியாக்கள்.. 20 எலெக்டிவ் கோர்ஸ்.. சென்னை ஐஐடியின் புதிய பாடத்திட்டம்!

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அளுநர் கூறுகையில், “பெண்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. நமது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும் காலனிய ஆதிக்கம் ஒடுக்கியது.

ஆனால் சத்தியமும், தர்மமும் தான் வென்றது. இந்த நாடு தர்மத்தைக் கொண்டு வளர்ந்தது. ஆரம்பத்தில் இந்தியாவும் பொருளாதாரத்தில் 6வது இடத்தில் இருந்தது. ஆனால், நல்ல வழிகாட்டுதல் இல்லாததால் பொருளாதாரம், கல்வியில் 11வது இடத்திற்கு பின்தங்கினோம். கடைசி 10 வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

உலகமே இந்தியாவின் ஆற்றல் திறனை திரும்பிப் பார்த்து வருகிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் இந்தியாவிடம் ஆலோசனை கேட்கப்படுகிறது. நூறாவது ஆண்டு சுதந்திர தினம் 2047ஆம் ஆண்டில் கொண்டாடும் போது, இந்தியா முழுமையாக வல்லரசு பெற்று விளங்கும். அதற்கு பெண் சக்தியின் பங்களிப்பு மிக அவசியம். ஒவ்வொரு வீட்டிற்கும் பெண்களே முதுகெலும்பாக இருக்கின்றனர். அதேபோல், நாட்டிற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த 25 வருடம் மிகவும் முக்கியமானது. இந்த நாட்டில் மிகப்பெரிய ஆற்றல், மிகப்பெரிய ஆளுமைகள் தேவை. நமது கனவு பெரிதாக இருக்க வேண்டும். பெண்கள் இல்லாத இந்தியா கிடையாது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுடபத்தை அறிமுகப்படுத்த வேண்டும். மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித்தரம் குறைவாக உள்ளது. நான் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றைப் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்குப் பார்வையை வளர்க்க வேண்டும்.

53 கோடி பெண்கள் பிரதம மந்திரியின் ஜன்தன் திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் 1.2 கோடி பேர் முத்ரா கடன் பெற்றிருக்கின்றனர். அடுத்த 20 வருடங்களில் இளைஞர்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருந்து, இந்த நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும். கடுமையாக உழைத்தால் நமது கனவுகளை அடைய முடியும்” என பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இரட்டை பட்டம்.. ஸ்டார்ட் அப் ஐடியாக்கள்.. 20 எலெக்டிவ் கோர்ஸ்.. சென்னை ஐஐடியின் புதிய பாடத்திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.