ETV Bharat / state

தமிழகத்தின் முதல் குடிமகன் இப்படி செய்யக்கூடாது.. நிதி ஆயோக் புறக்கணிப்பு பற்றி ஜி.கே.வாசன் கருத்து! - GK VASAN ON BUDGET

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 9:38 PM IST

GK VASAN ON BUDGET: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் வளர்ச்சி அடையும் வகையில் தான் இருக்கிறது, இதன் மூலம் நாம் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல்தான் செயல்படுகிறது எனபதை அறியாலாம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி கே வாசன்
ஜி கே வாசன் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், இன்று (ஜூலை 26) தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமாகவின் 234 தொகுதியினை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டதன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்ட நிர்வாகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்றத்திற்காக, தமாகாவை வலிமையாக மாற்றுவதற்கு அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்திற்கு புதிய நிர்வாகிகள் பிரிக்கப்பட்ட பின் தற்போதுதான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற ரீதியில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும். அதற்கான கோட்பாடுகள் வகுக்கப்பட்டு வருகிறது, ஆகஸ்ட் 9ஆம் தேதி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இதற்குப் பின் 4 மண்டலங்களுக்குச் சென்று தொண்டர்களோடு தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.

மேலும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வருங்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் வளர்ச்சி அடைவதற்கு மத்திய நிதி அமைச்சர் வழிவகை செய்துள்ளார்.

இதில் விவசாயிகள், பெண்கள், மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது என்றும் மற்றும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு 11.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கக் கூடியதாகும். மேலும், இந்தியாவின் வளர்ச்சி அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது. எல்லா வருடத்திலும், எல்லா நிதிநிலை அறிக்கையிலும் அனைத்து மாநிலங்களின் பெயரை சொல்லிக் குறிப்பிடுவதில்லை.

அது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பாஜக ஆட்சியாக இருந்தாலும் அனைத்தையும் உள்ளடக்கிய திட்டங்கள் உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் காரணங்களுக்காக இது போன்று பேசக்கூடாது. அதனை தவிர்த்து விட்டு மாநில வளர்ச்சிக்காக பேச வேண்டும். மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்படுகிறது. நிதியினை அனைத்து மாநிலத்திற்கும் சரியாக பகிர்ந்து கொடுத்திருக்கிறது. ஆகையால், இந்த நிதிநிலை அறிக்கையினை தமாகா வரவேற்கிறது.

பிரதமருடன் அனைத்து மாநில முதலமைச்சர்கள் அமர்ந்து அங்கு அரசியல் பேசாமல், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசுவது தான் நிதி ஆயோக் கூட்டம். அதனை தமிழக முதலமைச்சர் புறக்கணிப்பது அரசியல் காரணங்களுக்காகவே, தமிழ்நாட்டின் முதல் குடிமகன் அவர்தான். தன் கடமையை மறந்து இத்தகைய தவறு செய்யக் கூடாது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை நடைபெறுகிறது. மத்திய நிதிநிலை அறிக்கையினை கண்டித்து திமுக போராட்டம் நடத்துவது எதிர்கட்சியாக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் பெயர் இல்லாத போது திமுக எத்தனை போராட்டத்தை நடத்தியது?

மேலும், மின் கட்டணம் உயர்வு மக்களின் மீது மேலும் சுமையை ஏற்றக்கூடியது, ஒரு கையில் கொடுப்பது மறு கையில் வாங்கும் பழக்கத்தை கொண்டது தமிழக அரசு. திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அனைவருக்கும் தெரியும். அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் முடிந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அரிசி வாங்க முடியல.. பருப்பும் வாங்க முடியல.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எம்.பி!

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், இன்று (ஜூலை 26) தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமாகவின் 234 தொகுதியினை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டதன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்ட நிர்வாகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்றத்திற்காக, தமாகாவை வலிமையாக மாற்றுவதற்கு அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்திற்கு புதிய நிர்வாகிகள் பிரிக்கப்பட்ட பின் தற்போதுதான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற ரீதியில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும். அதற்கான கோட்பாடுகள் வகுக்கப்பட்டு வருகிறது, ஆகஸ்ட் 9ஆம் தேதி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இதற்குப் பின் 4 மண்டலங்களுக்குச் சென்று தொண்டர்களோடு தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.

மேலும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வருங்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் வளர்ச்சி அடைவதற்கு மத்திய நிதி அமைச்சர் வழிவகை செய்துள்ளார்.

இதில் விவசாயிகள், பெண்கள், மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது என்றும் மற்றும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு 11.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கக் கூடியதாகும். மேலும், இந்தியாவின் வளர்ச்சி அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது. எல்லா வருடத்திலும், எல்லா நிதிநிலை அறிக்கையிலும் அனைத்து மாநிலங்களின் பெயரை சொல்லிக் குறிப்பிடுவதில்லை.

அது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பாஜக ஆட்சியாக இருந்தாலும் அனைத்தையும் உள்ளடக்கிய திட்டங்கள் உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் காரணங்களுக்காக இது போன்று பேசக்கூடாது. அதனை தவிர்த்து விட்டு மாநில வளர்ச்சிக்காக பேச வேண்டும். மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்படுகிறது. நிதியினை அனைத்து மாநிலத்திற்கும் சரியாக பகிர்ந்து கொடுத்திருக்கிறது. ஆகையால், இந்த நிதிநிலை அறிக்கையினை தமாகா வரவேற்கிறது.

பிரதமருடன் அனைத்து மாநில முதலமைச்சர்கள் அமர்ந்து அங்கு அரசியல் பேசாமல், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசுவது தான் நிதி ஆயோக் கூட்டம். அதனை தமிழக முதலமைச்சர் புறக்கணிப்பது அரசியல் காரணங்களுக்காகவே, தமிழ்நாட்டின் முதல் குடிமகன் அவர்தான். தன் கடமையை மறந்து இத்தகைய தவறு செய்யக் கூடாது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை நடைபெறுகிறது. மத்திய நிதிநிலை அறிக்கையினை கண்டித்து திமுக போராட்டம் நடத்துவது எதிர்கட்சியாக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் பெயர் இல்லாத போது திமுக எத்தனை போராட்டத்தை நடத்தியது?

மேலும், மின் கட்டணம் உயர்வு மக்களின் மீது மேலும் சுமையை ஏற்றக்கூடியது, ஒரு கையில் கொடுப்பது மறு கையில் வாங்கும் பழக்கத்தை கொண்டது தமிழக அரசு. திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அனைவருக்கும் தெரியும். அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் முடிந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அரிசி வாங்க முடியல.. பருப்பும் வாங்க முடியல.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எம்.பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.