ETV Bharat / state

பிரான்ஸ் தேசிய தின விழா; புதுச்சேரியில் இரு நாட்டு சார்பில் மரியாதை! - French National Day

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 3:18 PM IST

French National Day: பிரான்ஸ் தேசிய தின விழாவை ஒட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்னத்தில் பிரான்ஸ் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

பிரான்ஸ் மற்றும் புதுச்சேரி அரசு அதிகாரிகள்
பிரான்ஸ் மற்றும் புதுச்சேரி அரசு அதிகாரிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுச்சேரி: கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

மேலும், அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர். இத்தினத்தை நினைவுகூறும் வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ம் தேதி பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். அந்த வகையில், புதுச்சேரியில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்திய ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்சு துணை தூதர் லிசே டல்போட் பரே, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கோவையில் ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. இஸ்கான் அமைப்புடன் மதநல்லிணக்க திருவிழா!

புதுச்சேரி: கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

மேலும், அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர். இத்தினத்தை நினைவுகூறும் வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ம் தேதி பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். அந்த வகையில், புதுச்சேரியில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்திய ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்சு துணை தூதர் லிசே டல்போட் பரே, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கோவையில் ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. இஸ்கான் அமைப்புடன் மதநல்லிணக்க திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.