ETV Bharat / state

“விஐடி வேந்தா் விஸ்வநாதனின் வாழ்க்கை வரலாறு கலங்கரை விளக்கு போன்றது” - முன்னாள் நீதிபதி ப.சதாசிவம்! - Former Chief Justice Sathasivam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:45 AM IST

Updated : Jun 3, 2024, 10:53 AM IST

Former Chief Justice P Sathasivam: விஐடி வேந்தா் ஜி.விஸ்வநாதனின் வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கு போன்று ஒளிவீசக்கூடியது என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் புகழாரம் சூட்டியுள்ளாா்.

அறக்கட்டளைக்கு காசோலை வழங்கும் புகைப்படம்
அறக்கட்டளைக்கு காசோலை வழங்கும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: நியுயாா்க் மாகாணத்தின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்ற விஐடி வேந்தா் விஸ்வநாதனுக்கு, வேலூர் மாவட்ட அனைத்து சங்கங்கள் மற்றும் தலைமுறைப் பேரவை இணைந்து பாராட்டு விழா காட்பாடி தனியாா் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

முன்னாள் நீதிபதி ப.சதாசிவம் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூரில் உள்ள 25 தொழில் அமைப்புகள் இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரளா ஆளுநருமான சதாசிவம் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீதிபதி பதவி என்பது ஒரு சன்யாசி பதவியாகும். உழைப்பவர்கள் கண்டிப்பாக முன்னேற வேண்டும். நீதிபதியாக இருக்கும் போது மும்பை வெடிகுண்டு வழக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு, மனிதக் கழிவுகள் மனிதனே அகற்றுதல் தொடர்பான வழக்கு, ஊனமுற்றோருக்கான சலுகை குறித்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.

நான் ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு கேரள மாநிலத்தில் சிறந்த பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டது. பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட விஐடி தற்போது சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் விஐடியில் சேர வேண்டும் என ஏராளமான மாணவர்கள் ஆசைப்படுகின்றனர். ஏனென்றால், இங்கு தான் சிறந்த கல்வி வழங்கப்படுகிறது.

விஐடி வேந்தா் விஸ்வநாதன் நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் புரிந்துள்ளாா். இவா், 1984இல் தொடங்கிய பொறியியல் கல்லூரி 2001-இல் விஐடி பல்கலைக் கழகமாக உயா்ந்ததுடன், தற்போது இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை மத்திய அரசு பாராட்டி உள்ளது. வேந்தர் பல ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியுள்ளார்.

உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் 100-ல் ஒன்றாக திகழ வேண்டுமென வேந்தர் விஸ்வநாதன் உழைத்து வருகிறார். ரூ.4 கோடி மதிப்பில் நூலகம் ஒன்றைக் கட்டி தந்தை பெரியார் பெயர் வைத்துள்ளது பாராட்டத்தக்கதாகும். உலகத் தரத்தில் உயர்ந்துள்ள ஜி.விஸ்வநாதன் வாழ்க்கை அனைவருக்கும் பாடமாகும். அவரது வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கு போன்று ஒளிவீசக்கூடியது” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். வேலூர் மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள், வேலூர் தலைமுறைப் பேரவை நிர்வாகிகள் இணைந்து மாணவர்களின் உயர் கல்விக்காக, அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

இதில், கோவை கே.ஜி.மருத்துவமனை தலைவர் கே.ஜி.பக்தவச்சலம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கே.கணேஷ், முன்னாள் வேளாண்மை துறை கூடுதல் செயலாளர் ராஜேந்திரன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையும் படிங்க: கருத்து கணிப்புகளின்படி, மீண்டும் மோடியே பிரதமர்! - தமிழிசை சௌந்தர்ராஜன் - Lok Sabha Election 2024

வேலூர்: நியுயாா்க் மாகாணத்தின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்ற விஐடி வேந்தா் விஸ்வநாதனுக்கு, வேலூர் மாவட்ட அனைத்து சங்கங்கள் மற்றும் தலைமுறைப் பேரவை இணைந்து பாராட்டு விழா காட்பாடி தனியாா் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

முன்னாள் நீதிபதி ப.சதாசிவம் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூரில் உள்ள 25 தொழில் அமைப்புகள் இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரளா ஆளுநருமான சதாசிவம் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீதிபதி பதவி என்பது ஒரு சன்யாசி பதவியாகும். உழைப்பவர்கள் கண்டிப்பாக முன்னேற வேண்டும். நீதிபதியாக இருக்கும் போது மும்பை வெடிகுண்டு வழக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு, மனிதக் கழிவுகள் மனிதனே அகற்றுதல் தொடர்பான வழக்கு, ஊனமுற்றோருக்கான சலுகை குறித்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.

நான் ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு கேரள மாநிலத்தில் சிறந்த பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டது. பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட விஐடி தற்போது சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் விஐடியில் சேர வேண்டும் என ஏராளமான மாணவர்கள் ஆசைப்படுகின்றனர். ஏனென்றால், இங்கு தான் சிறந்த கல்வி வழங்கப்படுகிறது.

விஐடி வேந்தா் விஸ்வநாதன் நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் புரிந்துள்ளாா். இவா், 1984இல் தொடங்கிய பொறியியல் கல்லூரி 2001-இல் விஐடி பல்கலைக் கழகமாக உயா்ந்ததுடன், தற்போது இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை மத்திய அரசு பாராட்டி உள்ளது. வேந்தர் பல ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியுள்ளார்.

உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் 100-ல் ஒன்றாக திகழ வேண்டுமென வேந்தர் விஸ்வநாதன் உழைத்து வருகிறார். ரூ.4 கோடி மதிப்பில் நூலகம் ஒன்றைக் கட்டி தந்தை பெரியார் பெயர் வைத்துள்ளது பாராட்டத்தக்கதாகும். உலகத் தரத்தில் உயர்ந்துள்ள ஜி.விஸ்வநாதன் வாழ்க்கை அனைவருக்கும் பாடமாகும். அவரது வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கு போன்று ஒளிவீசக்கூடியது” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். வேலூர் மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள், வேலூர் தலைமுறைப் பேரவை நிர்வாகிகள் இணைந்து மாணவர்களின் உயர் கல்விக்காக, அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

இதில், கோவை கே.ஜி.மருத்துவமனை தலைவர் கே.ஜி.பக்தவச்சலம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கே.கணேஷ், முன்னாள் வேளாண்மை துறை கூடுதல் செயலாளர் ராஜேந்திரன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையும் படிங்க: கருத்து கணிப்புகளின்படி, மீண்டும் மோடியே பிரதமர்! - தமிழிசை சௌந்தர்ராஜன் - Lok Sabha Election 2024

Last Updated : Jun 3, 2024, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.